Switch Language:   English | தமிழ்

    மதுரையில் இன்று (புதன்கிழமை) மாலை நடந்த பொதுக்கூட்டத்தில் 'மக்கள் நீதி மய்யம்' என்று தனது கட்சியின் பெயரை அறிவித்த நடிகர் கமல் ஹாசன், தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் தனது கட்சியின் கொள்கைகளை விளக்கி உரையாற்றினார்.

    காவிரி நீர் பங்கீடு தொடர்பான தீர்ப்பு, வருத்தமளிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் கருத்தத் தெரிவிக்கும்போதே ரஜினிகாந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.

    நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் சினிமாவை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்துள்ளனர். புதிய கட்சி தொடங்கவும், அந்த கட்சிக்கு தொண்டர்களை சேர்க்கவும் அவர்கள் இருவரும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    நடிகர் கமல்ஹாசன் தனது புதிய கட்சியை வருகிற 21-ந்தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளார். அன்றைய தினம் அவர் ராமேஸ்வரத்தில் இருந்து அரசியல் சுற்றுப் பயணத்தையும் தொடங்க இருக்கிறார்.