இன்று ஒக்டோபர்11 சர்வதேச பெண் பிள்ளைகள் தினம்.
- admin
- Category: விசேட தினங்கள்
- Hits: 597
உலகம் முழுவதும் வாழுகின்ற பெண் பிள்ளைகளுக்கான ஒரு தினமாக ஒக்டோபர் பதினோராந்திகதி(11) அனுஷ்டிக்கப்படுகின்றது. 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்ற பெண்களின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் 55வது அமர்வின்போது இத்தொனிப்பொருள் தெடார்பாக வருடந்தோறும் ஒக்டோபர் 11ஆந்திகதியை அனுஷ்டிக்கபடும் என்றும் அறிவித்திருந்தது.
அதன் அடிப்படையில் உலகம முழுவதும் பெண் பிள்ளை தொடர்பாக சமூகங்கள் எடுக்கப்பட வேண்டிய விடயங்களில் அதிகரித்த கவனத்தைச் செலுத்த வேண்டும் என்பதற்காகவும், இது தொடர்பானவை சர்வதேச தரத்தில் வலியுறுத்தப்பட வேண்டும் என்பதற்காகவும் இத்தினம் உருவாக்கப்பட்டது. இதுதொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவத்திலுள்ள நாடுகளினது ஒன்றிணைந்த ஒத்துழைப்புடன் ஒரு உடன்பாடு ஏற்படுத்தப்பட்டதன் விளைவாக இத்தினம் பிரகடத்தப்பட்டு அதன் முதலாவது சர்வதேச தினத்தை 2012 ஒக்டோபர் 11ஆந்திகதி 'நீங்கள் எமது மகளாகும்' என்கிற தொணிப்பொருளில் கொண்டாடுகின்றது. இது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் சபையினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில் உலக பெண் பிள்ளைகளது நிலவரத்தை எடுத்தியம்புகின்றது.
இந்த சர்வதேச பெண் பிள்ளையின் தினத்தில் உலகம் முழுவதும் இவர்களது எண்ணிக்கை தொடர்பாகவும் அறிய வேண்டியுள்ளது. குறிப்பாக இன்று பாடசாலை செல்லும் பெண் பிள்ளைகளது உரிமைகள் மறுக்கப்பட்டு அவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள் கட்டவிழ்த்தப்படுவதும் சாதாரண விடயமாக பரவிக் கிடக்கும் இன்றைய உலகில் இப்படியான ஒரு சர்வதேச தினம் பற்றிய நிகழ்வான ஒரு பாரிய மாற்றத்தை ஏற்படுத்தலாம் எனவும் கூறப்படுகின்றது. அந்தவகையில் உலக சனத் தொகையில் சுமார் 130மில்லியனைக் கொண்ட பாடசாலை செல்லும் இளைஞர் பருவத்தையுடையவர்களில் சுமார் 70வீதமானோர் இந்தப் பெண்கள் பிள்கைள் காணப்படுகின்றனர் என கூறப்படுகின்றது. இன்று கல்வியில் திறமை காட்டும் பெண்கள் ஆண்களுக்குச் சமமாக எந்த தொழிலையும் மேற்கொண்டு சமநிலைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இப்பிரச்சினைகளிலிருந்து விடுபட வேண்டிய அவசியமும் அங்கே காணப்படுகின்றமை முக்கியத்துவமான விடயமாகக் கொள்ளலாம்.
உலக நாடுகள் பெறும்பாலானவற்றில் வாழும் பெண்கள் எதிர்நோக்கும் தீவிரமான பிரச்சினைகளுக்கு அடிப்படைக்காரணியாக கல்வி, சுகாதாரம், போசாக்கு, வறுமை, மொழி, சமயம், தேசியம், வகுப்புவாதம், இனவாதம், குடும்ப அமைப்புக்கள், பெற்றோரின் அன்பு, சமூக பாதுகாப்பு, பால்நிலை, தாய்மை, விளையாட்டு, நவீன தொழில் நுட்பம் போன்ற பல்துறை சார்புகளிலும் பெண் பிள்ளைகள் நோக்கி வருகின்ற நிலைமைகள் தொடர்பாகவும் அதிகூடுதல் கவனமெடுத்து இத்தினத்தில் சமூகத்தின் மத்தியில் வலியுறுத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பரீட்சையில் தோல்வி, தோல்வியை ஏற்றுக் கொள்ளாத மனப்பக்குவம், தான்தோன்றித்தனமான போக்கு போன்ற உதவாதவைகள் தவிர்க்கப்பட்டு நமது நாட்டின் பெறுமதி மிக்க சொத்தா இந்த பெண் பிள்ளைகளை நாம் ஒவ்வொருவரும் கருதவேண்டும்.
எமது பெண் பிள்ளைகளை பாதுகாத்து, கல்வி, சுகாதாரம், வறுமை, மொழி, சமயம், தேசியம், வகுப்புவாதம், இனவாதம். குடும்பங்கள், பெற்றேரின் அன்பு, சமூகப் பாதுகாப்பு, பால்நிலை, தாய்மை, விளையாட்டு, நவீன தொழில் நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் இன்றைய காலகட்டத்தில் இவர்கள் எதிர்நோக்குகின்ற இன்னல்களும், துன்பங்களும் தொடர்பான கவனத்தை செலுத்துவதுடன், பாடசாலைகளில் தரம் 6இலிருந்து உயர்தரம் வரையிலான கற்றலில் ஈடுபடுகின்ற பெண் மாணவிகளையும், இடைநடுவில் பாடசலைக் கல்வியை விட்டுவிலகுகின்ற யுவதிகளையும் கவனத்திற் கொண்டு அவர்களது எதிர்கால விருட்சத்திற்கான அத்திவாரமாக இத்தினத்தை முன்னெடுத்துச் சென்று 'நீங்கள் எமது மகளாகும்' எனும் தொணிப்பொருளின் அடிநாதத்தை உரத்து ஒலிக்கச் செய்வதன் ஊடாக சமூதாயத்தின் பற்றாளர்களாகி தாய், பிள்ளை, சகோதரன், உறவினன் என்கிற சகோதர பாசமிக்கவர்களாக மாற்றமடையச் செய்வதன் மூலம் இத்தினத்தை அனுஷப்போம்.