Breaking News
இரசாயன உரங்களால் குழந்தை பிறப்பு வீதம் வீழ்ச்சி!
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 381
தற்போதைய காலக்கட்டத்தில் குழந்தை பிறப்பு வீதம் இலங்கையில் குறைவடைந்து வருவதாக தென் மாகாண ஆளுநர் ஹேமகுமார நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இதற்கு காரணம் இரசாயன உரங்களை விவசாயத்திற்கு பயன்படுத்துவதே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இயற்கை உர பாவனைக் குறைந்து இரசாயன உரப்பாவனை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் இயற்கை உரங்களை பயன்படுத்துவது தொடர்பில் திருகோணமலை பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்றைய தினம் கலந்துக் கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தென் மாகாண ஆளுநரான ஹேமகுமார நாணயக்கார முன்னாள் விவசாய அமைச்சர் என்பது குறிப்பிடத்தக்கது.