விடுகதைகள்
- Editor
- Category: விடுகதைகள்
- Hits: 513
1. பகலில் தூங்கி இரவில் விழிப்பான் - அவன் யார்?
- [விண்மீன்]
2. கால் இல்லாத மான், வேர் இல்லாத புல்லைத் தின்னும் - அது என்ன?
- [மீன் மற்றும் பாசி]
3. ஒற்றைக் கால் மனிதனுக்கு ஒன்பது கை - அது என்ன?
- [மரம்]
4. கிளைகள் உண்டு, ஆனால் இலைகள் கிடையாது - அது என்ன?
- [மான் கொம்பு]
5. சிறகடிக்காத பறவை, ஊர் ஊராய் பறக்கும் - அது என்ன?
- [விமானம்]
6. காவல் காக்கும், ஆனால் நாயல்ல. காலை கடிக்கும், ஆனால் செருப்பல்ல - அது என்ன?
- [முள் செடி]
7. ஒளி தரும்-விளக்கல்ல, வெப்பம் தரும்-நெருப்பல்ல, பளபளக்கும்-தங்கம் அல்ல - அது என்ன?
- [சூரியன்]
8. கண்ணுக்குள் இருப்பவன் கவலைக்கும் மகிழ்ச்சிக்கும் எட்டிப் பார்ப்பான் - அவன் யார்?
- [கண்ணீர்]
9. உதைக்குப் பறப்பவனை துரத்துவார்கள் சிலர், அதை ரசிப்பார்கள் பலர் - அவன் யார்?
- [கால்பந்து விளையாட்டு]
10. புள்ளிக்குச் சொந்தக்காரன், துள்ளி ஓடுவதில் கெட்டிக்காரன் - அவன் யார்?
- [மான்]
11. ஒலிப்பான், ஒலியை நிறுத்தினால் தகவல் கொடுப்பான் - அது என்ன?
- [டெலிபோன்]