திறன்பட கற்றலுக்கு இன்றியமையாத காரணிகள்
- MSF.Nadhwa
- Category: ஆலோசனை
- Hits: 1132
01. ஊக்குவித்தல் (Motivation)
கற்றலுக்கு ஒரு ஊந்துதல் அவசியம் என்று மெக்கானல் என்பவர் கூறுகிறார். கல்விக்கு இன்றியமையாத அடிப்படைக் காரணி ஊக்கபடுத்தலாகும். ஊக்கபடுத்தல் இன்றி வாழ்கையில் எத்துறையிலும் முயன்று வெற்றி பெற இயலாது.
சூழ்நிலைத் தேவைகள் பெருகப் பெருகஇ கற்றலின் அளவும் அதிகரிக்கும. பாடசாலை என்பது கற்றலுக்கு ஏற்ற ஒரு சூழ்நி;லையைத் தோற்றுவிக்கும் நிலையாகும்.குழுக்கலாக சேர்ந்து கற்பது திறம்பட கற்பதற்கு துணையாக அமையும். ஒரு ஊக்கப்படுத்தலாகவும் மாணவர்களுக்கு அமைகின்றது.
02. பின் அறிவு (Feed back)
கற்றலைத் துரிதப்படுத்தவும் நிலைப்படுத்தவும் உதவும், நினைவு கூர்தலில் விளக்கப்பட்டுள்ள சிக்கனமாகக் கற்கும் முறைகள் கற்றலைச் சிறப்பாகக் கற்க உதவுகின்றன. நல்ல புலக்காட்சித்திறன், கற்ற கருத்துக்களை பொருத்தமாக ஒருங்கினைக்கும் திறன் ஆகியனவும் கற்றலை துரிதப்படுத்த உதவும். மாணவர்கள் கற்ற பாடத்தினை மீன்டும் ஒருதடவை மீட்டிப் பார்க்கின்ற போது, கற்ற பாடங்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்ள முடியும்.
கற்றபின் கற்றல் என்பதும் எமது அறிவுதரத்தினை வளர்க்க வல்லது என்பதனை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தமது பாடங்களை ஒரு நிலைப்படுத்தி கற்பதற்கு உதவியாக அமையும்.
03. வழிகாட்டல்(Guidance)
வழிகாட்டல் கற்றலை விரைவுபடுத்து வல்லது. சுயமுயற்ச்சியின் பயனாகவே கற்றல்
எழுகிறதெனினும், திறனுள்ள ஆசிரியர் ஒருவரது வழிகாட்டுதல் கற்றலை துரிதப்படுத்துவதற்கும்,
குறித்த பாடங்களை இலகுவில் கற்பதற்க்கு மாணவர்களுக்கு வழிகாட்டுகின்றது.
ஓர் ஆசிரியர் வகுப்பில் முக்கியமாகச் செய்யவேண்டியது, மாணவனை உற்று நோக்கி அவனுடன் நெருங்கிப் பழகி அவனுடைய திறன்;களை அறிந்தும்இ அத்திறன்களைப் பயன்படுத்திச் சுய முயற்ச்சியில் அவற்றின் முழுப்பயன்களை அவன் அடைய அவனை ஊக்குவித்தலும், மற்றும் அவனுக்குத் தேவைப்படும் போது வழிகாட்டுதலும் அவசியமாகும்.
கற்றலில் வழிகாட்டுதலில் ஆசிரியரது பங்கு மூவகைப்பட்டதாகும்.
01. கற்க வேண்டிய பொருளின் இயல்பு பற்றியும் அதனைத் திறன்படக்கற்க உதவும் முறைகள் பற்றியும் மாணாக்கர் அறிய உதவுதல்.
02. திறன்படக் கற்றளுக்குதவும் தன்னம்பிக்கை, ஊக்கப்படுத்தலை மாணவர்களுக்கு வழங்குதல்.
03. கற்றலில் எழக்கூடிய இடர்பாடுகளை முன்னரே உணர்ந்து அவைகளை நீக்க உதவுதல்.
04. படிக்கும் பழக்கம்(Study Habits)
ஒரு பாடத்தின் பொருள் பற்றிய அறிவைப் பெற நாம் திட்டமிட்டு செயற்படுதலே படிப்பு எனப்படும். கற்றலுக்கும் படிப்பு இன்றியமையாதாகும், பாடசாலை வாழ்க்கையின் அடிப்படையாக இதனைக் கருதலாம், படிப்பு என்பது பல நோக்கங்களைக் கொண்டது. வாழ்கைiயில் புதிதாக எழும் நிலைமைகளைச் சமாளிக்கத் தேவைப்படும், பொருளறிவையும் பழக்கவழக்கங்களையும் பெற நாம் படிக்கிறோம். நமது வாழ்கையைப்பயன்படுத்தி வளமுறச் செய்வதற்க்கும் படிப்பு பயன்படுகிறது. புதியன புனைவதும் படிப்பின்றி இயலாது, பிறருடன் தொடர்பு கொள்ளத் தேவைப்படும் அடிப்படைத் திறன்களிள் படிப்புத் திறனும் ஒன்றாகும், மற்றவை பேச்சுத்திறனும் எழுத்துத்திறனுமாகும்.
05. திட்டமிட்டுக் கற்றல்(Programmes Matrial)
மாணாக்கரால் எளிதாகக் கற்கக் கூடிய தொடர்புடைய சிறு சிறுபடிகளை அல்லது பகுதிகளாகப் பாடங்கள் வகுக்கப்பட்டு கற்றல் ஒவ்வொரு பகுதியும் அதற்க்கு முன் கற்கப்பட்ட பகுதியின் அடிப்படையில் அமைந்திருக்கும், தனக்கு இயலும் வேகத்தில் தொடர்புடைய இப்பாடப் பகுதிகளை மாணவர்களால் கற்க்க முடிகிறது. ஒரு பகுதியில் காணப்படும் வினாவிற்க்கு மாணாக்கன் விடையளித்தும் அவ்விடை சரியானதா என்ற அறிவு அடுத்த பகுதிக்குச் சென்றவுடன் அவனுக்கு கிடைத்து விடுகிறது. இவ்வாறு உடனுக்குடன் சரி , தவறு என்று எழும் அறிவு, கற்றலை உறுதிப்படுத்துகின்றது.
திட்டமிடப்பட்ட பாடப்பகுதியினைத் தயாரிப்பதில் மிக முக்கியமான கூறு, பாடத்துக்கான சிறு பகுதிகளை அடுத்தடுத்துத் தொடற்ச்சியிடனும், முறைப்படியும், குறிப்பிட்ட ஒரு கல்வி இலக்கை அடையும் வகையில் எழுதுவதாகும்.
தொகுப்பு:
றினோஸ் ஹனீபா
PGD in Peace & Conflict Studies (UOC) BSW Special in Counseling(NISD),
Dip in. Professional Counseling (SEUSL)