பரீட்சைக்குத்தயார் செய்தல் எப்படி?
- MSF.Nadhwa
- Category: ஆலோசனை
- Hits: 1203
மாணவர்களை பரீட்சைக்குத் தயார் செய்தல் என்பது மாணவர்களின் எதிர்காலம் தொடர்பாக அவர்கள் கொண்டுள்ள அச்சத்தைப் போக்கி சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக் கொடுக்கும் வழிமுறையாகும். இன்று பலவிதமான வழிகாட்டுதல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டாலும் பொருத்தமான பரீட்சை வழிகாட்டல் முறையாக PQRST முறை காணப்படுகின்றது.
Preview - மதிப்பீடு செய்தல்
Question - கேள்வி கேட்டல்
Read - வாசித்தல்
Summary - சுருக்கமளித்தல்
Test - பரீட்சித்தல்
இவைகளினூடாக மாணவர்களின் கற்றல் நுட்பத்தினை வளர்த்துக் கொள்ள முடியும். மேலும் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தினை வளர்த்; துக் கொள்வதற்கு சில நுட்பங்களை கருத்தில் கொள்ள வேண்டும்.
• நினைவுபடுத்தல்
• கவனயீர்ப்பு
• ஒழுங்கமைப்பு
• சிந்திக்கும் ஆற்றல்
• ஈடுபாடு
• விளங்கிக் கற்றல்
• சிறு சிறு பகுதிகளாகக் கற்றல
மேலும் உளவியல் அறிஞர்களான சிம்சன், நெஸ்ற் ஆகியோரின் ஆய்வின் பிரகாரம் பின்வருவன கற்றல் நுட்பங்களாக முன்வைக் கப்படுகின்றன:
• சுருக்கக் குறிப்புக்களை எழுதுதல்
• கற்கும் பாடத்தின் பிரதான கருத்துக்களை பிரித்தெடுத்தல்
• சில தரவுகளை அட்டவணைப்படுத்தல்
• முக்கியமான சொற்பதங்களை அடிக்கோடிடல் அல்லது Highlight பண்ணுதல்
• பொருத்தமான பாடப்பகுதிகளைத் தனியாகவும் குழுவாகவும் கற்றல்
கற்றல் என்பது ஒவ்வொரு மனிதனும் மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியத்துவமிக்க ஒரு செயல்முறையாகும், ஆனால் பல மாணவர் கள் கற்கும் விடயங்களை எவ்வாறு தன்னுள் வைத்துக் கொள்ள முடியும் என்பதனை அறிந்து கொள்வதில்லை. மேலும் கற்கின்ற விடயங்களை நினைவில் வைத்துக் கொள்ள கையாளும் வழிமுறைகளாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
• ஒழங்குபடுத்திக் கற்றல்
• முன்னர் படித்தவற்றை பின்னர் படித்ததுடன் ஒப்பீடு செய்தல்
• உதாரணங்களைச் சிந்தித்தல்
• தனக்கு கேட்கும் வகையில் வாசித்தல்
• நண்பர்களுடன் படித்ததைப் பகிர்தல்
• இடைவெளி விட்டுக் கற்றல்
• திரும்பத் திரும்பக் கற்றல்
மாணவர்கள் பரீட்சைக் காலங்களில் மிக முக்கியமாக தவிர்ந்து கொள்ள வேண்டிய விடயங்கள் நான்கு உண்டு, அவையாவன:
• சோம்பல் - Lazy
• தூக்கம் - Sleep
• சினிமா - Cinema
• இசை - Music
மாணவர்கள் பரீட்சைக் காலங்களில் மேற்குறிப்பிட்ட நான்கு விடயங்களில் மிக முக்கிய கவனம் செலுத்தியாக வேண்டும். ஆனால், இவ்விடயத்தில்தான் மாணவர்கள் பலவீனமானவர்களாக இருக்கின்றார்கள். எனவே, பெற்றோரும் ஆசிரியர்களும் இது தொடர்பாக கவனம் செலுத்தியாக வேண்டும். இவ்விடயங்கள் மாணவர்களின் நினைவாற்றலை குறைக்கின்றன. இதனால் பரீட்சையில் அவர்களால் படித்தவற்றை நினைவில் கொண்டுவந்து சிறந்த பெறுபேற்றினை பெறமுடிவதில்லை. மாணவர்களின் கற்றலைப் பாதிக்கின்ற ஏனைய காரணிகள்:
• நுண்மதி (Intelligent)
• உடலியற் பண்புகள்
• தனியாள் வேறுபாடுகள்
• கற்றல் வேகம்
• நுழைவுத் தேர்ச்சிகள்
• எதிர்பார்ப்பு மட்டம்
• கற்கும் ஆற்றல்
• சமூக, பொருளாதாரப் பின்னணி
பாடசாலைகளில் இன்று பயன்படுத்தப்படும் தனிக் கற்பித்தல் முறைகள் (Individual Methods), விளையாட்டு முறைகள் (Play way Methods), செயல்முறைகள் (Activity Methods), காட்சிப் பொருள்களைப் பயன்படுத்திக் கற்பித்தல் போன்றவையாவும் உளவியலின் அடிப் படையில் எழுந்த முறைகளேயாகும். கல்வியென்பது ஒரு பாடப்பொரு ளைப் போதித்தல் மட்டுமன்று. கல்வியின் குறிக்கோள் ஒரு மாணவனின் முழு வளர்ச்சியேயாகும். பாடசாலை என்பது சமுதாயத்தின் ஒரு பகுதியாகும். சமுதாயத்தினர், பெற்றோர்கள், ஆசிரியர்;கள் ஆகியோரது முழு ஒத்துழைப்பினையும் பெற்று மாணவர்களின் கல்வி முன்னேற் றத்துக்காக பாடசாலை சிறப்பாக செயலாற்ற 'கல்வி உளவியல்' ஆசிரியர்கள், பெற்றோர்களுக்கு உதவி புரிகின்றது.
தொகுப்பு:
Rinos Haniffa
PGD in Peace & Conflict Studies (UOC) BSW Special in Counseling(NISD),
Dip in. Professional Counseling (SEUSL)