Breaking News
செவ்வாய் கிரகத்தில் ஒட்சிசனை உருவாக்க நாசா திட்டம்
- MSF.Nadhwa
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 817
செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சியில் நாசா நிறுவனம் நீண்டகாலமாக மும்முரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது.
இவற்றில் ஒரு பகுதியாக 2020ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்திற்கும், பூமிக்கும் இடையிலான போக்குவரத்தை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.
இதற்காக 2012ம் ஆண்டிலிருந்து ரோவர் விண்கலமானது செவ்வாய் கிரகத்தில் தங்கி ஒட்சிசன் உள்ளதா என்பது உட்பட பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில் அங்கு ஒட்சினை செயற்கையான முறையில் உருவாக்குவது தொடர்பில் ஆராயப்பட்டுவருகின்றது.
எனினும் காபனீரொட்சைட்டிலிருந்து ஒட்சிசனை உருவாக்கும் விண்கலங்கள் ஏற்கணவே நாசாவிடம் இருப்பது குறிப்பிடத்தக்கது.