விடுகதைகள்
- Editor
- Category: விடுகதைகள்
- Hits: 458
1. கண்ணே இல்லாதவன், கண் இழந்தோருக்கு வழிகாட்டுவான் – அவன் யார்?
- [கைத்தடி]
2. உதை வாங்கி, உதை வாங்கி ஊருக்கு சேதி சொல்வான் – அவன் யார்?
- [தண்டோரா]
3. கருப்பன் தண்ணீரில் குளித்து வெள்ளையனாவான், வெள்ளையன் பிறகு விருந்தாவான் – அவன் யார்?
- [உளுத்தம் பருப்பு]
4. உருவம் இல்லாத ஒருவன், உலகெங்கும் உலவித் திரிவான் – அவன் யார்?
- [காற்று]
5. அடித்தாலும், உதைத்தாலும் அவன் அழ மாட்டான் – அவன் யார்?
- [பந்து]
6. நனைந்தாலும் நடுங்கமாட்டான் – அவன் யார்?
- [குடை]
7. அனலில் பிறப்பான், ஆகாயத்தில் பறப்பான் – அவன் யார்?
- [புகை]
8. வயிற்றில் விரல் சுமப்பான், தலையில் கல் சுமப்பான் – அவன் யார்?
- [மோதிரம்]
9. எட்டுக்கால் ஊன்றி இடமும், வலமுமாக வருவான் – அவன் யார்?
- [நண்டு]
10. ஓடையில் நிற்கும் ஒற்றைக்காலனுக்கு ஒரே குறி உணவு – அவன் யார்?
- [கொக்கு]