Switch Language:   English | தமிழ்

    இரசாயனத்துக்கான நோபல் பரிசு 3 பேருக்கு

    இவ்வருடத்திற்குரிய‌ வேதியலுக்கான (இரசாயனம்)நோபல் பரிசு மூன்று விஞ்ஞானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    இரசாயன பரிசோதனைகளை இணையவெளிக்கு கொண்டு செல்வதில் அவர்கள் ஆற்றிய பணிகளுக்காக அவர்களுக்கு இது வழங்கப்படுவதாக நோபல் பரிசுக் குழு அறிவித்துள்ளது.

    ஸ்டார்ஸ்போர்க் மற்றும் ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் மார்ட்டின் கார்ப்லஸ், ஸ்டான்ஃபோர்ட் மருத்துவ பல்கலைக்கழக கல்லூரியைச் சேர்ந்த மைக்கல் லெவிட், தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஏரியா வார்ஷெல் ஆகியோருக்கு இது வழங்கப்படுகின்றது.