நரம்புக் கலங்களில் ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய்யும் இழைமணிகள்
- Editor
- Category: விஞ்ஞானம்
- Hits: 310
நரம்புக் கலங்களில் ஏற்படும் பாதிப்பை நிவர்த்தி செய்யும் இழைமணிகள் – வருங்காலத்தில் புதிய சிகிச்சை
விஞ்ஞானிகள் நரம்புக்கலத்தினுள் இழைமணி நகர்வதையும், அதன் நகர்வுக்கும் நரம்புக்கல வளர்ச்சிக்கும் தொடர்பிருப்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.
இவ் இழைமணிகளை செயற்பாட்டு நிலைக்கு கொண்டுவருவதன் மூலம் நரம்புத்தொகுதியில் உண்டாகும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என கருதுகின்றனர்.
இதன் மூலம் நரம்பியல் நோய்களுக்கு புதுவகை சிகிச்சை முறையொன்று வருங்காலங்களில் பயன்பாட்டுக்கு வரலாம் என நம்பப்படுகிறது.
இழைமணிகள் கலத்திற்கு சக்தி வழங்கும் கலங்கள், இவை நரம்புகள் உடல் முழுவதும் வளர தேவையான சக்தியை வழங்குகின்றன.
மனிதன் முதிர்ச்சியடையும் பட்சத்தில் இந்நரம்புக்கல்கள் புரத மூலக்கூறுகளால் தடுக்கப்பட்டு அவற்றின் அசையும் திறன் தடைப்படுகிறது.
இவற்றினை அசையும் நிலைக்கு கொண்டுவருவதன் மூலம் நரம்புக்கலங்கள் மீளுருவாக்கம் அடைவதை லண்டன் விஞ்ஞானிகள் அவதானித்துள்ளனர்.
செயற்பாடற்ற இழைமணிகளை செயற்பாட்டு நிலைக்கு கொண்டு வருவதற்கென குறித்தவகை புரதத்தினை பாதிக்கப்பட்ட நரம்புக்கலங்களிலிருந்து அகற்றியிருந்தனர்.
இது அவ் இழைமணிகள் தாமகவே செயற்பாட்டு நிலைக்கு திரும்ப ஏதுவாயிருந்தது.
இப் பிசோதனைக்காக அவர்கள் எலிகளை பயன்படுத்தியிருந்தனர்.