Switch Language:   English | தமிழ்

    தவிர்க்கக்கூடாதஉணவுப்பொருட்கள்

    ஒரேஞ்
    விட்டமின் சி ஒரு முகப்படுத்தப்பட்டு சேகரித்துவைக்கப்பட்டுள்ளது. இப்பழத்தில் இன்டர் பெரான் என்ற இரசாயனத்தூதுவர்களைஅதிகம் உற்பத்தி செய்வது விட்டமின் சி. காற்று மற்றும் நீர் மூலம் பரவும்நோய்த் தொற்றுக்கிருமிகளை இந்த இன்டர் பெரான்கள் எதிர்த்துப் போராடிஉடலில் அவை சேராமல் அழிக்கின்றன.ஒரேஞ்கிடைக்காத போது எலுமிச்சம்பழச்சாறுஅருந்தலாம்.

     

    வெங்காயம்
    வெள்ளைப்பூண்டுடன் சேர்ந்து வல்லமை மிக்க புகழ் மிக்க மருந்தாக வெங்காயம்காணப்படுகிறது. ஜலதோசத்தை ஏற்படுத்தும் நச்சு நுண்மங்களையும், புற்று நோய்களையும், இதய நோய்களையும் தடுத்து நிறுத்துகிறது. நோய்த் தொற்றைத் தடுத்து உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது. வெங்காயத்தில் உள்ள அலிலின் என்ற இரசாயனப்பொருள்தான் பக்றீரியாக்கள், நச்சு நுண்மங்கள், காளான் போன்றவை உடலில் சேராமல் தடுக்கின்றன.இத்துடன் புற்றுநோய்க்கட்டிகள்வளராமலும் தடுக்கின்றன.

    பருப்பு வகைகள்
    பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற தானிய வகைகளில் உள்ள விட்டமின் ஈ வெள்ளை இரத்த அணுக்கள் சிறப்பாகச் செயல்படத் தூண்டி விடுகின்றன. இதனால் நோய்எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது.

    கடலுணவு
    இறால், மீன் மற்றும் நண்டு: அழிந்து போன செல்களால் நோயும், நோய்த்தொற்றும் ஏற்படாமல் தடுப்பதில் இவற்றில் உள்ள துத்தநாக உப்பு உதவுகிறது. எனவே வாரம் ஒரு நாள் இவற்றில் ஒன்றைச் சேர்த்து சாப்பிட்டு வரவும்.

    பாலாடைக்கட்டி
    சீஸ் உட்பட பால் சம்பந்தப்பட்ட பொருட்களில் உள்ள கல்சியம், மக்னீசியம் உப்புடன் சேர்ந்து கொண்டு உடலில் நோய் எதிர்ப்புத்தன்மை அமைப்பு கருதி தவறாமல் ஆற்றலுடன் செயல்பட உதவுகிறது.

    கெரட்
    நோய் எதிர்ப்புச் சக்தி வேலிகள் நன்கு உறுதிப்பட கெரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் உதவுகிறது. குறிப்பாக நம் உடல் தோலிலும், சளிச் சவ்விலும் நோய் எதிர்ப்புப் பொருள்கள் நன்கு செயல்படும்படி தூண்டிக்கொண்டே இருப்பது கெரட்தான்.

    தேநீர்
    தேநீரில் உள்ள மக்னீசியம் உப்பு நோய் எதிர்ப்புச் செல்கள் அழிந்து விடாமல் பாதுகாப்பதில் ஒரு நாட்டின் இராணுவம் போன்று செயல்படுகிறது. சூடான தேநீர் ஒரு கப் அருந்துவதால் நோய்த் தொற்றைத் தடுத்து விடலாம்.

    வெள்ளைப்பூடு
    கிரேக்கத் தடகள வீரர்கள் விரைந்து ஓட ஊக்கம் தரும் மருந்தாக வெள்ளைப்பூடை கைகளில் அழுத்தித் தடவிக் கைகளைக் கழுவினார்கள். இதனால் நோய் நுண்மங்கள் அழிந்தன. குடலில் உள்ள புழுக்களிலிருந்து மற்றும் தலைவலி முதல் புற்றுநோய் வரை பல நோய்களையும் குணமாக்க வெள்ளைப்பூண்டு பயன்படுத்தப்படுகிறது. அறிவியல் முடிவுகளால் கூட வெள்ளைப்பூண்டு பயன்படுத்தப்படுகிறது. உடலில் நன்மை செய்யக்கூடிய கொலாஸ்டிரல் உருவாக பூண்டின் பங்கு மகத்தானது.