ஆயுளை அதிகரிக்க.....
- admin
- Category: உடல் நலம்
- Hits: 772
ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை உடைய முதியவர்களுக்கு ஆயுள் அதிகம் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக எழுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களின் ஆரோக்கியமான உணவுப்பழக்கவழக்கம் அவர்களது ஆயுட் காலத்தை குறிப்பிடப்பட்டுள்ளது. கொழுப்புச்சத்துடைய உணவுப்பொருட்களை அதிகமாக உட்கொள்வதனால் அதிக உயிர் ஆபத்து ஏற்படக்கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மரக்கறி வகைகள் மற்றும் பழங்களை உட்கொள்ளும் நபர்களின் ஆயுட்காலம் பத்து ஆண்டுகள் வரையில் நீடிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2500 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் மூலம் இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஐஸ்கிறீம், முட்டை, பால், சீஸ், இறைச்சி வகைகள் போன்ற உணவுப் பொருட்களை உட்கொள்வோர் விரைவில் உயிரிழக்கக்கூடிய அபாயத்தை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.