டுவிட்டரின் அதிரடி நடவடிக்கையால் பயனர்களுக்கு இக்கட்டான நிலை!
- admin
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 159
டுவிட்டர் வலையமைப்பில் பயனர்களுக்கு போஸ்ட் இடுவதற்கு இதுவரை காலமும் பெரிய அளவில் எவ்விதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டிருக்கவில்லை.
ஆனால் தற்போது அதிரடி நடவடிக்கையாக டுவிட்டர் நிறுவனம் கட்டுப்பாட்டினை கொண்டுவந்துள்ளது.
தற்போது வரையில் தானியங்கி முறையில் போஸ்ட் இடுவதற்கான வசதி டுவிட்டர் தளத்தில் காணப்படுகின்றது.
இதனைப் பயன்படுத்தி எதிர்காலத்தில் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான பதிவுகளை இட முடியும் என்ற கட்டுப்பாடே நடைமுறைக்கு வந்துள்ளது.
இதன்படி டுப்ளிக்கேட் டுவீட்கள் மற்றும் பல்க்காக செய்யப்படும் டுவீட்கள் நீக்கப்பட்டு டுவிட்டர் கணக்கும் தடைசெய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளால் மேற்கொள்ளப்பட்ட அனுமதியின்றிய அரசியல் ரீதியான விளம்பரங்களின் விளைவே இக் கட்டுப்பாடு என தகவல் கசிந்துள்ளது.