நிறுவனத்தில் குழுப்பணியை மேம்படுத்தும் வழிகள் !
- admin
- Category: ஆலோசனை
- Hits: 89
ஒரு நிறுவனமானது தனது இலக்குகளுக்கு ஏற்றவாறு அதில் உள்ள பணியாளர்களை குழுக்களாக பிரித்து செயல்படும். அப்படி குழுக்களாக பிரிக்கும் பொழுது உங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளைத் தவிர்த்து, நிறுவனத்திற்கு பயனளிக்கும் வகையில் உங்கள் குழுவிற்கான பங்கை நீங்கள் அளிக்க வேண்டும்.
? ஒரு விஷயத்தை முதலில் நீங்கள் நன்றாக உணர்ந்துக் கொள்ள வேண்டும். ஒரு நிறுவனத்தை பொறுத்தவரை அனைத்து குழுக்களுமே சமமானதுதான். முக்கியத்துவம் வாய்ந்த குழு இது, முக்கியத்துவம் அற்றக் குழு இது என்பது போன்று பாகுபாடு எதுவும் இல்லை. குழுக்கள் செய்யும் பணிகள் வேண்டுமானால் மாறுபடலாம். ஆனால் எந்த குழுவும் எதற்கும் சளைத்தது இல்லை.
? நீங்கள் இருக்கும் குழுவில் உங்களுக்கு பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் என்று இருக்கலாம். அதை விடுத்து இந்த குழுவின் நோக்கம் என்ன? இதில் எனது பங்கு என்ன என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
? இவ்வாறு அனைவரும் குழு உணர்வுடன் பணிபுரியும் பொழுது அவர்களால் நிறுவனத்தின் இலக்கை புரிந்துக் கொண்டு அதை அடைவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.
? குழுவாக பணிபுரியும் பொழுது வேலையை பகிர்ந்து செய்ய வேண்டும். மாறாக, இந்த வேலையை நீதான் செய்ய வேண்டும் என்பது போன்ற திணித்தல் இருக்கக் கூடாது. இது குழு உணர்வை தகர்த்துவிடும்.
? மேலும், சச்சரவுகள் ஏதேனும் ஏற்படும்பொழுது அவர்கள், குழுவிற்கு உள்ளே பேசி தீர்வு காண்பதால் அவர்கள் இடையிலான நட்புணர்வு அதிகரித்துவிடுகிறது. அதனால், அந்த குழு சிறப்பு வாய்ந்த குழுவாக உருவெடுக்கிறது.
? ஆனால், அவ்வாறு இல்லாமல் இந்த குழுவை எனக்கு பிடிக்கவில்லை அல்லது எனது நண்பர் இருக்கும் குழுவில்தான் நானும் பணிபுரிவேன் என்பது போன்று கூறுதல் உங்கள் ஆளுமைத் திறனை பிறரிடத்தில் குறைத்து மதிப்பிட செய்கிறது.
? குழு உறுப்பினர்கள் ஒற்றுமையுடன் அவர்களது முயற்சிகளை மேற்கொள்ளும் பொழுது அவர்கள் நினைத்த இலக்குகளை ஒன்றன் பின் ஒன்றாக எளிதில் அடைய முடிகிறது.
? ஒருவேளை, ஒருவர் செய்யும் வேலையில் ஏதேனும் தவறுகளோ அல்லது பின்னடைவுகளோ ஏற்படும்பொழுது, அந்த குழுவில் உள்ளவர்கள் அவரை ஊக்குவிப்பதால் அந்த குழு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் நினைத்த வேலையை செய்து முடிக்கிறது.
? மாறாக, ஒருவர் செய்யும் தவறை சுட்டிக்காட்டி அவருக்கு மன அழுத்தத்தை உண்டாக்குவதால் அவரால் தனது முழுதிறமையையும் வெளிப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. அதனால் அந்த குழு பின்னடைவை சந்திக்கிறது.
? ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட திறன்கள் இருக்கும். அதை சரியாக அந்தக் குழு பயன்படுத்தும் பொழுது அந்த திறனானது மொத்த குழுவை அடுத்தக் கட்டத்திற்கு மேம்படுத்துகிறது. இவ்வாறு ஒவ்வொருவரின் திறனையும் பயன்படுத்தும் பொழுது அந்த குழு அந்த நிறுவனத்தின் சக்தி வாய்ந்த குழுவாகவும் முக்கியத்துவம் வாய்ந்த குழுவாகவும் மாறிவிடுகிறது.
? சச்சரவுகளைக் களைத்து, திறன்களை ஊக்குவித்து, ஒற்றுமை உணர்வுடன் ஒன்றாக உழைக்கும் பொழுது, ஒரு குழுவானது அதன் இலக்குகளை அடைவதோடு அந்த நிறுவனத்தின் வெற்றி வாய்ந்த குழுவாக மாறிவிடுகிறது.