Breaking News
பயனாளர்களின் தகவல்களை பாதுகாப்பதாக உறுதி
- Imran
- Category: தகவல் தொழில்நுட்பம்
- Hits: 127
இலங்கை பயனாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதாக வைபர் தகவல் தொடர்பாடல் செயலி இலங்கைக்கு உறுதிமொழி வழங்கியுள்ளது.
இணையத்தில் பல்வேறு தனிப்பட்ட அந்தரங்க தகவல்கள் கசிவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து வைபர் நிறுவனம் இவ்வாறு அறிவித்துள்ளது.
இலங்கையில் 8 மில்லியனுக்கு அதிகமான மக்கள் வைபர் செயலியை பயன்படுத்தி வருகின்ற நிலையில், வைபர் ஸ்டிக்கர்களை 100 மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கையர்கள் அனுப்புவதும் பெறுவதுமாக இருக்கிறார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.