வளைந்த நாணல்! (சிறுவர் கதை)
- Category: கதைகள்
- Hits: 1282
தென்றல் வீசிக் கொண்டிருக்கிறது. தோட்டத்திலுள்ள
மரங்கள், புற்களையும் நாணலையும் பார்த்து, “”அற்பனே!
பலமற்றுப் போய் தென்றலுக்கெல்லாம் அசைந்து கொடுக்கிறாய்?”
என்று ஏளனம் செய்தன.
மறுநாளே சூரைக்காற்று வீச ஆரம்பித்தது. மரங்கள்,
“மளுக் மளுக்’கென முறிந்து விழுந்தன.
அப்போது நாணல், “”மரங்களே! நீங்களும் என்னைப் போல்
வளைந்து கொடுக்கப் பழகியிருந்தால் இப்படி வேரோடு
சாய்ந்திருக்க மாட்டீர்களே! நாங்களும் உபயோகமானவர்களே!
ஆற்றுநீர் கரையை அரிக்காமல் தடுக்கிறோம். இல்லையேல்,
நீங்களெல்லாம் கம்பீரமாக நிற்க முடியாது.
உருவில் சிறியதான எறும்பு, தும்பிக்கைக்குள் நுழைந்து
கடித்தால் யானையாலும் தாங்க முடியாது,” என்றது.
மரங்களால் எதுவுமே பேச முடியவில்லை! அதனால் உருவில்
சிறியவர் என்று எவரையுமே அலட்சியப் படுத்தக்கூடாது.
அச்சாணி சிறியதுதான். ஆனால், அது இல்லாவிட்டால் வண்டி
ஓடாதே! வளைந்து கொடுத்து வாழப் பழகினால் நாணல் போல்
எச்செயலிலும் நிலைத்திருக்கலாம்.
MCF. SAJEERA.
Grade 10
Mahmud Ladies College
Kalmunai