வி ரக்ததியில் என்னவெல்லாம் உருவாக்குகின்றனர் பாருங்களேன்…..!
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 222
பல ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் அல்லாடிய இளைஞர் ஒருவர் வெறுத்துப்போய் தனக்குத் தெரிந்த தொழில்நுட்பத்தை வைத்து சொந்தமாக விமானத்தை உருவாக்கி அசத்தியிருக்கிறார்.
இந்திய உத்தரப்பிரேதச மாநிலம், முசாபர் நகர் அருகேயுள்ள கசெர்வா கிராமத்தைச் சேர்ந்தவர் 26 வயது இளைஞரான அப்துல் வாஜீத். மத மோதல்களில் பாதிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்த அவர், உள்ளூரில் பாடசாலைக் கல்வியை முடித்துவிட்டு டில்லி பல்கலைகழகத்தில் மேற்படிப்பை முடித்தார். டில்லி சப்தர்ஜங் விமான நிலையத்தில் நடந்த முகாமொன்றில் வான் போக்குவரத்துச் சாதனங்களை வடிவமைப்பதற்கான அடிப்படை பயிற்சியைப் பெற்றிருக்கிறார்.
இந்நிலையில், டில்லி பல்கலைக்கழகத்தில் படிப்பை முடித்து பல இடங்களில் வேலை தேடியிருக்கிறார். ஆனால், வேலை கிடைத்தபாடில்லை. இதனால், கடும் விரக்தியில் இருந்த அவருக்கு தான் கற்ற வான் போக்குவரத்துச் சாதன வடிவமைப்புப் பயிற்சியை வைத்து சொந்தமாக விமானத்தைத் தயாரிக்க முடிவு செய்தார்.
இதற்காக, டில்லி சப்தர்ஜங் விமானநிலையத்தின் வான் போக்குவரத்துச் சாதன வடிவமைப்புத்துறையின் பயிற்றுநராக இருந்த ஹேமந்த் வர்மா என்பவரின் உதவியை நாடியிருக்கிறார். அவரது வழிகாட்டுதல்கள், ஆலோசனைகளுடன் சொந்தமாக விமானத்தை வடிவமைத்து முடித்துவிட்டார்.
அதிகபட்சமாக 10 கி.மீ. தூரம் வரை தனது விமானம் பறக்கும் என நம்பிக்கை ததும்பப் பேசுகிறார் வாஜீத். இந்த விமானத்தைத் தயாரிப்பதற்கு ரூ. 11 இலட்சம் செலவாகியிருக்கிறதாம்.
குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரது கிராமத்தினர் கொடுத்த நிதி உதவி மூலமாக இந்த விமானத்தைத் தயாரித்துள்ளாராம். முதலில் கேலி பேசிய கிராமத்தினர் இவரது முயற்சியைக் கண்டு பாராட்டி, பின்னர் நிதி உதவி செய்துள்ளனராம்.