குரங்கொன்றின் சேட்டையால் கென்யாவில் மின்சாரம் துண்டிப்பு
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 224
குரங்கொன்று காரணமாக கென்யாவில் தேசிய அளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
கிடவுரு நீர்மின் நிலையத்தின் மின்மாற்றி மீது குரங்கொன்று விழுந்ததாலேயே நாடெங்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதன்போது 180 மெகா வோட் அளவிலான மின்சாரத்தை விநியோகிப்பது தடைப்பட்டதாக மின்சார நிறுவனமான கென்ஜென் தெரிவித்துள்ளது.
நான்கு மணி நேரத்திற்குப் பின்னர் மின்மாற்றி சரிசெய்யப்பட்டு மின்விநியோகம் ஆரம்பிக்கப்பட்டிருப்பதோடு குறித்த குறங்கும் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளது.
“கென்ஜென் மின் நிலையங்களைச் சுற்றி மின்வேலிகள் அமைக்கப்பட்டு வனவிலங்குகள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன.
இந்த சம்பவத்திற்காக நாங்கள் வருந்துகிறோம். எங்களுடைய எல்லா மின் நிறுவனங்களிலும் பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து ஆராய்ந்து வருகிறோம்” என கென்ஜென் அறிவித்துள்ளது.
கென்யா வனவிலங்கு பாதுகாப்பு சேவை மையத்திற்கு அந்தக் குரங்கு எடுத்துச் செல்லப்பட்டுவிட்டது.
இந்த மின்சார துண்டிப்பின் காரணமாக கென்யாவின் தொழில்துறை கடுமையாகப் பாதிக்கப்பட்டது.