இரண்டு முறை நோபல் பரிசு வென்ற பெண்
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 335
பொலோனியம், ரேடியம் என்ற இரண்டு கதிரியக்க தனிமங்களை கண்டுபிடித்ததற்காகவும், அது தொடர்பான ஆய்வுக்காகவும் இரண்டு முறை நோபல் பரிசை வென்ற முதல் அறிவியலாளர் தான் மேரி கியூரி.
போலந்து நாட்டில் வார்சா என்னும் இடத்தில் 1867ம் ஆண்டு நவம்பர் 7ம் திகதி பிறந்தார்.
போலந்தில் நடந்த சுதந்திர போராட்டத்தில் இவரது குடும்பம் பரம்பரையாகவே ஈடுபட்டதால், மேரி மற்றும் அவரது மூத்த சகோதர, சகோதரிகள் அங்கு வாழவே சிரமப்பட்டனர்.
இவருக்கு 12 வயதாக இருக்கும் போது தந்தை இறந்து போனார், இப்படியே சோகமான வாழ்க்கைக்கு மத்தியிலும் இவருடைய அறிவியல் தாகம் தீராமல் இருந்தது.
அதன் விளைவாக தான் பொலோனியம் என்ற தனிமத்தை கண்டுபிடித்தார், தன் தாய்நாட்டினை பெருமைப்படுத்தும் வகையில் இந்த பெயரை சூட்டினார்.
“எப்படியும் கடவுள் புரிந்து கொள்ளவே முடியாதவர்” என்பது இவருடைய அனுபவமான ஆன்மீக சிந்தனை