பணியிடத்தில் உங்கள் மதிப்பை உயர்த்திக் கொள்வது எப்படி?
- admin
- Category: ஆலோசனை
- Hits: 108
இன்றைய போட்டி நிறைந்த உலகில் நமது வேலையை தக்க வைத்துக் கொள்ளுவதற்காக நாம் பல்வேறு திறமைகளைக் கட்டாயம் பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். இந்த நிலையில், நாம் திறமையானவராக இருந்தால் மட்டும் போதுமானதாக இருக்காது. மேலதிகாரியிடம் நம் மீதான நன்மதிப்பை வளரச் செய்வது மிக முக்கியமான ஒன்றாகும். அதற்கான சில குறிப்புகளைப் பற்றி இன்று அறிந்துக் கொள்வோம்.
திறமை :
? மேலதிகாரிகளிடம் நமது பணித்திறமையின் மூலமாகவும், சிறந்த உரையாடல் மூலமாகவும் நமது நன்மதிப்பை உயர்த்திக் கொள்ளலாம். நீங்கள் திறமைமிக்க பணியாளராக இருந்தாலும், சில சமயங்களில் அவசியமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
என்னால் முடியாது :
? உங்களின் மேலதிகாரி உங்களது திறமையை சோதிக்கும் பொருட்டு கூடுதல் பணிகளையோ அல்லது எதிர்பாராத சமயங்களில் பணிகளை வழங்கவோ அல்லது புதிய விஷயங்களைப் பற்றியோ உங்களிடம் கலந்துரையாடலாம்.
? அந்த நேரத்தில் நீங்கள் எனக்குத் தெரியாது, இந்த வேலையை என்னால் செய்ய முடியாது என்று எதிர்மறையாக பதிலளிக்காதீர்கள்.
? கட்டாயம் செய்யலாம். எனக்கு சிறிது கால அவகாசம் கொடுங்கள், எப்படி சிறப்பாக செய்வது என்று திட்டமிட்டுச் சொல்கிறேன் என்பது போன்று நீங்கள் பதிலளிக்க வேண்டும்.
? உண்மையில் அந்த கூடுதல் வேலையால் உங்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கலாம். ஆனால், இப்படி பதிலளிப்பதால் மேலதிகாரிக்கு உங்கள் மீதான மதிப்பு அதிகரிக்கக்கூடும்.
? பின்னர் அந்தப் பணியின் நிறைகுறைகளை எடுத்துக்கூறி, தேவையான உதவிகளை பெற்றுக் கொள்ளலாம்.
எனக்கு நேரமில்லை :
? ஒரு வேலையை உங்களுக்கு புதிதாக அளிக்கும் பொழுது எனக்கு நேரமில்லை என்றுக் கூறுவது, கொடுக்கும் வேலையை செய்ய மறுக்கிறீர்கள் என்றே அர்த்தம் ஆகும்.
? இவ்வாறு எதிர்மறையாக பதிலளிப்பதால் முக்கியமான பணியைக்கூட இவர் செய்ய மறுக்கிறாரே, என்பது போன்ற எதிர்மறைக் கருத்துக்கள் உங்கள் மீது ஏற்படலாம்.
? அவ்வாறு நடந்தால், உங்களுக்கு வரவேண்டிய பதவி உயர்வுகளும் சலுகைகளும் உங்களுக்கு கிடைக்காமல் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.
அது என் தவறல்ல, அவருடையது :
? நம் செய்யும் வேலையில் சில சமயங்களில் தவறு ஏற்படுவது இயல்புதான். ஒருவேளை சக பணியாளர் ஒருவர் தவறு செய்து இருந்தால், அது என்னுடைய தவறு அல்ல, இவர்தான் அந்த தவறுக்கு பொறுப்பு என்று சகப்பணியாளரைக் கைகாட்டுவது உங்கள் மதிப்பை குறைக்கும்.
? ஒரு விஷயத்தை பொறுப்பு ஏற்று சரியாக செயல்படுத்த முடியாதவர் என்ற எண்ணத்தை நிலைநிறுத்துவிடும்.
? ஆகவே, தவறை கண்டறிந்து திருத்திக் கொள்கிறேன் என்று நீங்கள் கூறலாம்.
அவர் அப்படிப்பட்டவர் :
? மேலதிகாரியிடம், எப்பொழுதும் பணிச்சூழலில் உள்ளவர்களையும் அதை சார்ந்தவர்களின் மதிப்பையும் குறைத்துக் கூறக்கூடாது. அவருக்கு ஒன்றும் தெரியாது என்பது போன்று புறம்பேசுவதும், தரம் தாழ்த்தி விமர்சிப்பதும் தவறாகும்.
? இது நீங்கள் பணியைத் தவிர்த்து இதுபோன்ற விஷயங்களில் தான் அதிக கவனம் செலுத்துகிறீர்கள் என்ற எண்ணத்தை மேலதிகாரிக்கு பதிவு செய்துவிடும்.
மேலே குறிப்பிட்டு உள்ள விஷயங்களை நீங்கள் கவனத்தில் கொண்டால் மேலதிகாரியின் மதிப்பை பெறுவதோடு, உங்கள் பணித்துறையிலும் உயரலாம்.