தன்னம்பிக்கை அற்றவரா நீங்கள்?
- admin
- Category: ஆலோசனை
- Hits: 144
நம்மில் சிலர் என்னத்தான் திறமை பெற்றிருந்தாலும் தன்னம்பிக்கை இல்லாத காரணத்தால் நம் வாழ்வில் முன்னேறாமல் பின்னடைவை சந்திக்கின்றோம். ஆதலால், தன்னம்பிக்கையின்றி வெற்றி என்பது நமக்கு எட்டாக்கனியாக மாறிவிடுகிறது. ஆகையால் வாழ்வில் முன்னேறுவதற்கு தன்னம்பிக்கை என்பது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதைப் பற்றி அறிந்துக் கொள்வோம்.
தன்னம்பிக்கை:
? தன்னம்பிக்கை என்பது தன்னைப் பற்றியும், தனது திறமையைப் பற்றியும், தனது பலம் மற்றும் பலவீனம் பற்றியும் சரியாக மதிப்பீடு செய்வதால் உருவாவது ஆகும்.
தன்னம்பிக்கையின் முக்கியத்துவம் :
? நமக்குள் புதைந்து கிடக்கும் திறமைகளை வெளியில் கொண்டுவர தன்னம்பிக்கை மிக அவசியம் ஆகும்.
? என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை ஒரு செயலை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு உற்சாகத்தை அளிக்கிறது. ஆனால், இந்தக் காரியம் வெற்றிபெறாது அதை ஏன் வீணாக முயற்சிக்க வேண்டும் என்ற அவநம்பிக்கை தோல்வியை தருகிறது.
? முயற்சி செய்தால் அனைத்திலும் வெற்றி பெறலாம். முயற்சிக்கு என்றும் தோல்வியே இல்லை என்ற எண்ணமும் சிந்தனைகளும் நம்முள் எப்பொழுதும் நிறைந்து இருக்க வேண்டும்.
? ஒரு காரியத்தை செய்ய தொடங்கும் பொழுது அது வெற்றி பெறுமா என்று வரும் பயம் இயல்பானதுதான். ஆனால், அந்த பயமானது நமது தன்னம்பிக்கையை தகர்த்துவிடக்கூடாது. ஆகையால் அந்த பயத்தை துணிவோடு வெற்றிக் கொள்ள பழக வேண்டும்.
? சிறிய விஷயங்களில் சுய சிந்தனையுடன் முடிவெடுக்கும் பழக்கம் நம்மிடம் இருந்தால், பெரிய விஷயங்களிலும் நம்மால் சரியான முடிவை எளிதாக எடுத்துவிட முடியும்.
? ஆனால், அனைத்து முடிவுகளையுமே நம்மால் தனித்து எடுத்துவிடமுடியாது. ஆகையால், சில சமயங்களில் பிறரிடம் ஆலோசனை கேட்பதில் தவறில்லை. அவர்கள் கூறும் கருத்துக்களை பரிசீலிப்பதிலும் தவறில்லை. ஆனால் இறுதி முடிவை நாம்தான் சிந்தித்து எடுக்க வேண்டும்.
? தன்னம்பிக்கையானது மனதளவில் மட்டும் இருந்து விடாமல் நாம் செய்யும் செயல்களிலும் பிரதிபலிக்க வேண்டும்.
? மற்றவர்களின் பிரச்சனைகளுக்கு யோசனைகளை வழங்கும் பழக்கமானது நமது தன்னம்பிக்கையை படிப்படியாக வளர்க்கும் தன்மை கொண்டது ஆகும். அது போன்ற பிரச்சனைகள் நமக்கு ஏற்படும்பொழுது அவற்றை எளிதாக நம்மால் கையாள முடியும்.
? யதார்த்தமான அறிவு, தெளிவான குறிக்கோள், அதற்கான செயல்பாடுகள், தோல்வியைக் கண்டு துவலாத மனம், எந்த தடை வந்தாலும் பாதையை விட்டு விலகி விடாத மன உறுதி, கடின உழைப்பு, தன்னம்பிக்கை ஆகியவற்றுடன் நீங்கள் எந்தக் காரியத்தில் இறங்கினாலும் அவை உங்களை வெற்றி பெறச் செய்யும்.