Switch Language:   English | தமிழ்

    ஏறாவூரில் அதிசய வாழைக்குலை

    வழமையாக நாம் பார்க்கின்ற வாழைக்குலைகள் அதன் நுனிப் பகுதியில் வெளிவந்து பூத்துக் காய்த்து பழுக்கும்.

    ஆனால் சற்று வித்தியாசமாகவும் அதிசயமாகவும் வாழைக்குலை ஒன்று வாழைத் தண்டின்  ஊடாக வெளித்தள்ளியுள்ளது.

    குறித்த அதிசயம், ஏறாவூர் ஓடாவியார் வீதியில் உள்ள ஒரு ஆசிரியையின் வீட்டின் கிணற்றடியில் உள்ள வாழை மரத் தண்டில் வெளித்தள்ளியுள்ளது.

    பலரும் குறித்த வாழைக் குலையினை பார்த்துச் செல்வதாக அந்த ஆசிரியை தெரிவித்தார்.