குழந்தைகளின் மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள் எவை தெரியுமா?
- admin
- Category: ஆலோசனை
- Hits: 104
இன்றைய சூழலில் குழந்தைகள் அதிக மன அழுத்ததிற்கு ஆளாகின்றனர். காரணம், தற்போது உள்ள அவசர காலத்தில் குழந்தைகள் பெற்றோர்களிடம் வளர்வதை விட தனிமையிலே அதிகம் வளர்கின்றனர். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் சின்ன சின்ன நடவடிக்கைகளை கூட கவனிக்க வேண்டும்.
குழந்தைகளை அவர்களின் வயதுக்கேற்ற இயல்பு நிலையுடன் இருக்க அனுமதியுங்கள். ஏனென்றால், இன்று நாம் அனுபவிப்பதை விட, அதிக மனநல சிக்கல்களை அவர்கள் எதிர்காலத்தில் சந்திக்க வேண்டியுள்ளது.
கல்வியிலோ, உடல்திறனிலோ, வேறு ஏதாவது ஒரு காரணத்தாலோ பின் தங்கியிருக்கும் போதும், நண்பர்களால் புறக்கணிக்கப்படும் போதும், ஆசிரியர் அல்லது பெற்றோரால் அடிக்கடி அவமானப்படுத்தப்படும் போதும், ஒரு குழந்தை தன்னைத் தானே குறைத்து மதிப்பிடத் துவங்குகிறது. இங்குதான் குழந்தையின் மனவெழுச்சி நிலை மாறுபடுகிறது.
இதை நாம் எப்படி கண்டுபிடிப்பது?
? உங்கள் குழந்தை அதீத தனிமையை விரும்புகிறார்களா?
? ஏதாவது ஒரு உடல் வலியைச் சொல்லி, பள்ளி செல்வதை படிப்பதைத் தவிர்க்கிறார்களா?
? தேர்வு நேரங்களில் அல்லது குறிப்பிட்ட சில நிகழ்வுகளின்போது வாந்தியெடுப்பதோ அல்லது வயிறு சரியில்லை எனச் சொல்கிறார்களா?
? உங்களின் சாதாரண கோபத்துக்கும், தனது அசாதாரண கோபத்தை வெளிப்படுத்துகிறார்களா?
? பொது நிகழ்ச்சிகளுக்கு வர மறுக்கிறார்களா?
? சில நேரங்களில் ஒருவித எரிச்சல், அழுகை அல்லது மனப்பதற்றத்துடன் காணப்படுகிறார்களா?
? உங்களால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கோபப்படுவதும் அடம்பிடிப்பதுமாக இருக்கிறார்களா?
மேற்கண்டவை மனப்பதற்றத்துக்கான அறிகுறிகள். இது ஓர் ஆலோசனைதான். மற்றபடி, உங்கள் குழந்தை மனப்பதற்ற நிலையில் உள்ளதா என்பதை அறிய ஒரு மனநல மருத்துவரிடம் காண்பித்து இது எந்த வகையிலான மனப்பதற்றம் என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.
பெற்றோர்கள், குழந்தைகளுக்கு கல்வியின் அவசியம், நல்ல மதிப்பெண் பெறுதலின் முக்கியத்துவம், லட்சியம் குறித்தான தூண்டுதல் மற்றும் உணர்வுப்பூர்வமான வழிகாட்டல் ஆகியவற்றை கற்பிக்க வேண்டும். இவைகளின் புரிதலே நமது குழந்தைகளை பொறுப்புடன் செயல்பட வைக்கும்.
அச்சுறுத்தும் மிரட்டல்கள், தண்டனை தரப்போவதான வார்த்தைகள் குழந்தையை உங்களிடமிருந்து பிரித்துவிடும் என்பதை மறவாதீர்கள். குழந்தைகள் புரிந்துக் கொள்ளும் அளவிற்கு நல்ல விஷயங்களை கூறுங்கள். குழந்தைகளை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை.