மாணவர்களைச் சீர்திருத்துவதற்கான முறைகள்
- MSF.Nadhwa
- Category: ஆலோசனை
- Hits: 969
(ஆசிரியர் மற்றும் பெற்றோர்களுக்கான ஆக்கம்)
பொருத்தப்பாடின்மையுள்ள மாணவர்கள் வெவ்வேறு விதமான நடத்தைகளை மேற்கொள்ளக் காரணம் என்ன? சிலர் பிற சிறுவர்களின் உடைமைகளைத் திருடுகிறார்கள், சிலர் ஆசிரியர்களிடமும் தம் தோழர்களிடமும் முரட்டுத்தனமாகவும் கிளர்ச்சி மனப்பான்மையுடனும் நடந்து கொள்கிறார்கள், வேறு சிலர் சமூகத் தொடர்புகளினின்றும் விலகித் தனியாள்களாக வாழ்கிறார்கள்.
பொருத்தப்பாடற்ற நடத்தையில் காணப்படும் இவ்வேறுபாடுகள் ஒருவனது உளப் போராட்டத்தின் இயல்பு, அவனது பழக்க வழக்கங்கள், பிறரின் மாதிரி நடத்தை மற்றும் வெளிப்படக் கிடைக்கும் வாய்ப்புக்களின் தன்மை ஆகியவற்றைப் பொருத்ததாகும்.
இம்மாணவர்களைத் திருத்த எவ்வகை முறைகளை ஆசிரியர்கள் கையாளலாம்? சாதாரணமாக தண்டனை முறையொன்றே இவர்களைச் சீர்திருத்தக் கையாளப்பட்டு வந்தது. சுட்டித் தனத்தினா லோ அறியாமையினாலோ ஒழுக்கமற்ற நடத்தையைப் பொறுத்தவறை தண்டனை சிறிது பயனளிக்கலாம். இன்று பல பெற்றோர்களும், ஆசிரியர்களும் குழந்தைகளது நெறிபிறழ்ந்த நடத்தையைக் கட்டுப படுத்தத் தண்டனையை மேற்கொள்கின்றனர். எதிர்ப்பு நடத்தைக்குத் தண்டனை கிடைக்கும் என்ற எண்ணம் சிலபோது இந்நடத்தையில் ஈடுபடாமலிருக்கக் குழந்தைகளைத் தூண்டக்கூடும்.
ஆனால், தண்டனை பலபோது குழந்தைகளிடம் தீவிரமான கிளர்ச்சி மனப்பான்மையினை தோற்றுவிக்க வல்லது. எடுத்ததெற் கெல்லாம் தண்டிப்பது என்பதைவிடப் பிரச்சினை நடத்தையை சிலபோது பாராமலிருப்பது ஒரளவு பயனுள்ளது. எனினும், எல்லா நிலைகளிலும் அல்ல. தாம் செய்த தவறுகளுக்கு தண்டனையைக் குழந்தைகள் எதிர்பார்க்கின்றனர். தண்டணை அளிக்கப்பட்டால் அவர்களது உள்ளத் திலிருந்து குற்ற உணர்வு மறையும். பொதுவாக தண்டனை ஆக்கமுறையில் திருத்தப் பயன்படாது. பொருத்தப்பாடின்மையினால் எழும் நடத்தைகளைப் பொறுத்தவரை தண்டனை பயனற்றது மட்டு மன்று நிலைமையை மேலும் மோசமாக்கவும் வல்லது. இதற்கு ஒரே ஒரு மருந்துதான் உண்டு. அது இந்நடத்தைகளின் அடிப்படை காரணங் களைக் கண்டறிந்து அவற்றை நீக்க முயல்வதாகும்.
இங்கு ஆசிரியர் கவனிக்க வேண்டியது, இத்தகைய மாணவர் கள் பாடசாலையில் தாமே செய்து வெற்றிகண்டு மனமகிழ்;ச்சி பெறக் கூடிய பல வேலைகளுக்கு வாய்ப்பளிப்பதாகும். மகிழ்ச்சி பரவிய குடும்ப, பாடசாலைச் சூழ்நிலைகளை ஏற்படுத்துவது பெற்றோரும,; ஆசிரியர்களும் கூட்டாக செய்ய வேண்டிய ஓர் கடமையாகும். வகுப்பு மாற்றத்திற்கு ஆண்டின் இறுதித் தேர்வில் ஒரு மாணவன் பெற்ற மதிப்பென்களை மட்டும் கருத்தில் கொள்ளாமல் கையெழுத்து (Hand Writing)இ நூல் நிலையப் படிப்பு, விளையாட்டு, நன்னடத்தை (Character) ஆகியவற்றுக்கும் மதிப்பென்களை அளிப்பது பயனுள்ளதாகும். தீவிரப் பொருத்தப்பாடின்மை மாணவர்களைக் கண்டு பிடித்து உளவளத்துணையாளர்களது (Counsellor) கவனத்திற்கு அத்தகை யோரைக் கொண்டுவருவது ஆசிரியரது கடமை. மற்றும் பெற்றோர் கூட்டங்களில் பெற்றோருக்கு கவலையளிக்கக்கூடிய மாணவர்களின்; பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றை நீக்குவதில் ஆசிரியர் பங்கு கொள்ள வேண்டும். தம் குழந்தைக்கு எம்முறைகளைக்கொண்டு பெற்றோர்கள் நற்பயிற்சியளிக்கலாம் என்ற அறிவினை அவர்கள் பெற்றால்தான் பிரச்சினை நடத்தையுள்ள சிறுவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு குறையும்.
ஆசிரியர் 'உளவளத்துணை' (Counselling) மூலம் மாணவருக்கு நல்வாழ்க்கை வாழும் முறைகளைக் கற்பித்தல் அவசியம். இவ்வறிவு மாணவர்களுக்குள் தங்களுள் செயல்படும் இயலபூக்கங்கள்(Motivations)இ மனவெழுச்சிகள் (Emotions) ஆகியவற்றின் தன்மைகளை தெளிவாக்குகின்றது இது தங்களது மனவளர்ச்சிக்கு வேண்டிய தேவைகள் எவை, இவற்றை சமூகமுன்னேற்றத்திற்கு ஊறு செய்யாத முறையில் எப்படி நிறைவு செய்யலாம் என்பதையும் போதிக்கின்றது. மற்றும், தமது ஆற்றல்களின் அளவினையுணர்ந்து தம்மால் வெற்றியுடன் செய்து முடிக்கக்கூடிய செயல்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திக் கூறுகின்றது. இவ்வாறு செய்தால்தான் மனவமைதியும், மனநலமும், பொருத்தப்பாடும் உண்டாகும். ஆகவே, உளவளத்துணை (Counselling) பற்றிய அறிவு பெற்றோர்களுக்கும் ஆசியர்களுக்கும் இன்றியமையாததாகும்.
தொகுப்பு:
றினோஸ் ஹனீபா
PGD in Peace & Conflict Studies (UOC) BSW Special in Counseling(NISD),
Dip in. Professional Counseling (SEUSL)