படிப்பில் பின்தங்கும் மாணவர்கள்
- MSF.Nadhwa
- Category: ஆலோசனை
- Hits: 1080
குழந்தைகள் பாடசாலையில் சரிவர படிக்கவில்லை என்றால் அதற்கு காரணங்கள் பல. அவையாவன...
- உடல் நலக் குறைவுகள்
- கண் பார்வை கோளாறுகள்
- காது மந்தம்
- உடலில் காச நோய்
போன்ற நாற்ப்பட்ட வியாதிகளில் ஏதாவது ஏற்பட்டிருக்கக் கூடும். களைப்பு, பலவீனம், மனதில் பயம், திகில், தன்னம்பிக்கை இல்லாமை, கோழைத்தனம் இவற்றாலும் பாடத்தில் கவனம் செலுத்த இயலாது. சொல்லிக் கொடுக்கும் பாடங்களோ வார்த்தைகளோ தனக்குப் புரியவில்லை என்றால் அதை எடுத்துச் சொல்ல தைரியமின்றி கவனிக்காமல் விட்டுவிடுவதும் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரையோ அல்லது தன்னுடன் படிக்கும் குழந்தைகளையோ கண்டு பயந்து படிக்காமல் ஒதுங்கினாலும் படிப்பில் கவனம் செலுத்த இயலாமல் போய்விடும்.
இப்படி ஏதாவதொரு காரணத்தால் வகுப்பில் பின்தங்கி வரும் குழந்தையைத் திட்டுவதாலோ, தன்டிப்பதாலோ பலன் ஏற்படாது. மாறாக ஆசிரியரும் பெற்றோரும் குழந்தைகளுடன் இனிமையாகப் பேசி காரணம் என்னவென்பதைக் கண்டு கொண்டு அதற்;குத் தகுந்த பரிகாரமளிப்பதுடன், குழந்தைக்கு தன்னம்பிக்கையையும், உற்சாகத்தையும் உண்டுபன்னி வளர்க்க வேண்டும், நாளடைவில் இதே குழந்தை வகுப்பில் முன்னேறி விட வாய்ப்பேற்பட்டு விடுகிறது.
வகுப்பில் ஒரு சில மாணவர்கள் எப்போதும் பின்தங்கிய நிலையிலேயே இருப்பார்கள். இவர்களுக்கு ஆசிரியர் வகுப்பில் பாடங்களை மிக வேகமாகச் சொல்லிக் கொன்டு போவது போல் தோன்றும், அதனால் அவர்கள் பாடத்தை புரிந்து கொள்ள இயலாமலும், படிப்பில் ஆர்வமில்லாமலும் காணப்படுவார்கள். இம்மாதிரி மாணவர்களை வகுப்பாசிரியர் குறிப்பாய் அறிந்து அவர்களைத் தனியாக அவர்கள் புரியும் வகையில் மெதுவாகச் சொல்லிக் கொடுக்க வேண்டும் நாளடைவில் மற்ற மானவர்களுடன் இணைந்து பாடங்களை கற்றுக் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.
சில மாணவர்கள் உண்மையிலேயே படிக்கும் திறமை உள்ளவர்களாக இருந்தாலும், தங்கள் திறமையைத் தாங்கள் தெரிந்து கொள்ளாமல் தாங்கள் மற்ற மாணவர்களை விடப் படிக்க இயலாதவர்கள் என்று பயந்து விடுகின்றனர். புயத்தின் காரணமாகவே படிப்பில் கவனம் போகாமல் உண்மையில் பின்தங்கியும் விடுகின்றனர். இவர்கள் பயந்ததற்;குக் காரணம் இவர்கள் தங்களை தாங்களே தாழ்திக்கொள்ளல் தான், வீட்டில் பெரியவர்களோ மற்ற மாணவர்களோ அவனை இழிவாகப் பேசுவதும், 'அவனுக்கு எங்கே படிப்பு வரும்' என்று கூறுவதும் இவனை அவ்வாறே நம்பச் செய்து விடுகின்றன. இதை ஆங்கிலத்தில் ஐவெநசழைசவைல ஊழஅpடநஒ (தாழ்ந்த மணப்பான்மை) என்று கூறப்படுகிறது.
இப்படிப்பட்ட மாணவர்கள் உண்மையில் மற்ற மானவர்கள் போன்றல்லர். எல்லாத் திறனும் படைத்தவர்கள், எல்லாக் காரியங்களிலும் அவர்கள் மிகுந்த புத்தி கூர்மையுடனும், கெட்டிக்காரர்களாகவும் இருப்பதை நாம் கண்ணால் பார்க்க முடியும். ஆரம்பத்திலேயே இவனை ஆசிரியர்களும், பெற்றோர்களும் அடையாளம் கண்டு தன்னம்பிக்கை பெற உதவ வேண்டும். உண்மையிலேயே அவன் கெட்டிக்காரன், மற்ற குழந்தைகளை விட நன்கு படித்து முன்னேறக் கூடிய ஆற்றல் உண்டு என்பதனை அவன் புரிந்து கொள்ளச் செய்ய வேண்டும். அவனுடைய மனப்சோர்வையை நீக்க வேண்டும். படிப்பில் அவனுக்குக் நுற்பமாகக் கற்பதை ஊட்டிவிட்டால் பின்னர் அவன் தானே ஒரு நல்ல மாணவனாக மாறிவிடுவான்.
தொகுப்பு:
றினோஸ் ஹனீபா
PGD in Peace & Conflict Studies (UOC) BSW Special in Counseling(NISD),
Dip in. Professional Counseling (SEUSL)