இதய நோய்களை கட்டுப்படுத்தும் புதிய சிகிச்சை
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 339
நோய்த்தடுப்பு சிகிச்சையானது கீல்வாத நோயாளர்களில் இதய நோய்களை கட்டுப்படுத்துவது அண்மைய ஆய்வொன்றின் மூலம் வெளிக்கொணரப்பட்டுள்ளது.
கீல்வாத நோயானது பிறபொருள் எதிரியால் உண்டாகும் நோயாகும்.
இதன்போது கல அழிவுக்கு காரணமான TNFI, IFN போன்ற Cytokines (பொதுவாக உடலைப் பாதுகாக்கின்ற பதார்த்தங்கள்) ஆரோக்கியமான கலங்களை தாக்குகின்றன.
தற்போதைய ஆய்வில் இருவகையான Anticytokines மேற்படி TNFI, IFN க்கெதிராக செயற்பட்டு கீல்வாத நோய்களை கட்டுப்படுத்தும் அதேவேளை இதயம் சம்பந்தமான தாக்கங்களையும் குறைப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கீல்வாத நோயாளர்கள் வீங்கிய மூட்டுக்களில் வலிகளை அனுபவிக்க நேரிடுகிறது. அது கட்டுப்படுத்தப்படாதவிடத்து காலப்போக்கில் இருதய நோய்களுக்கும் ஆளாகின்றனர்.
இவ் ஆராய்ச்சிக்கென கடந்த 5 வருடங்களாக கீல்வாத நோயால் பீடிக்கப்பட்டிருந்த 68 நோயாளர்கள் உட்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான தகவல்கள் Frontiers in CardioVascular Biology (FCVB) 2016 நிகழ்வின் போது இத்தாலியில் வெளியிடப்பட்டிருந்தது.