தாய்மார்களே! உங்க குழந்தைக்கு பால் கொடுக்கும்போது தெரியாம கூட இந்த உணவுகளை சாப்பிட்டுறாதீங்க!
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 97
பிறந்த குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது ஒவ்வொரு தாயின் கடமை. அந்த தாய்ப்பால் ஆரோக்கியமானதாகவும் சத்தானதாகவும் இருக்க வேண்டும். தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் தாய்ப்பால் கொடுக்கும் காலம் ஒரு முக்கியமான காலகட்டமாகும்.
குழந்தையின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு தாய்ப்பால் மிக அவசியம். ஏனெனில், அது குழந்தைகளுக்கு தேவையான நோயெதிர்ப்பு சக்தி மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. தாய் மற்றும் சேய் இருவருக்கும் இடையேயான பிணைப்பை பலப்படுத்துகிறது. இருப்பினும், பாலூட்டும் தாய்மார்கள் தங்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டியது மிக அவசியம்.
ஏனெனில் சில உணவுகள் தாய்ப்பாலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் மற்றும் அவர்களின் குழந்தையின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம். ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில், உலக தாய்ப்பால் வாரமான 2023இல், தாய்ப்பால் கொடுக்கும் போது நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகளின் பட்டியலைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
1. காஃபின்
தினமும் காலையில் எழுந்ததும் நீங்கள் காபி குடிக்கிறீர்களா? ஒரு கப் காபி உங்கள் நாளைத் தொடங்கத் தூண்டும் அதே வேளையில், உங்கள் கர்ப்ப காலத்தில் மற்றும் பிரசவத்திற்குப் பிறகு அது அவ்வாறு உங்கள் உடலில் செயல்படாது. காஃபின் தாய்ப்பாலுக்குள் சென்று உங்கள் குழந்தையின் தூக்க முறைகளையும் நடத்தையையும் பாதிக்கலாம்.
உங்கள் காஃபின் உட்கொள்ளலை ஒரு நாளைக்கு இரண்டு கப் காபிக்கு மிகாமல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். அத்துடன் காஃபின் நீக்கப்பட்ட விருப்பங்களுக்கு மாறுவது பரிந்துரைக்கப்படுகிறது.
2. காரமான உணவுகள்
காரமான உணவுகள் சில குழந்தைகளுக்கு செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது அசௌகரியம் மற்றும் ஒவ்வாமைக்கு வழிவகுக்கும். உங்கள் உணவில் இருந்து மசாலாப் பொருட்களை முற்றிலுமாக நீக்க வேண்டிய அவசியமில்லை என்றாலும், அவற்றை மிதமாக உட்கொள்ளுங்கள். உங்கள் குழந்தையின் உடல் அவற்றை எவ்வாறு எதிர்கொள்கிறது என்பதைக் கவனியுங்கள்.
3. மது
தாய்ப்பால் கொடுக்கும் போது மது அருந்துவது உங்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு தீங்கு விளைவிக்கும். மது அருந்துவது குழந்தைகளின் மூளை மற்றும் அறிவாற்றல் திறன்களை பாதிக்கும். இந்த காலகட்டத்தில் மதுவை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்று நிபுணர்கள் கடுமையாக அறிவுறுத்துகின்றனர்.
இருப்பினும், தவிர்க்க முடியாத கடமைகள் காரணமாகவோ அல்லது நீங்கள் விரும்புவதால் மட்டுமே நீங்கள் ஒரு பானத்தைத் தேர்வுசெய்தால், உங்கள் தாய்ப்பாலை ஒரு பானத்திற்கு குறைந்தது இரண்டு மணிநேரமாவது பம்ப் செய்து நிராகரிக்க வேண்டும். உங்கள் தாய்ப்பாலில் ஆல்கஹால் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்புதான் உங்கள் குழந்தைக்கு கொடுக்க வேண்டும்.
4. சில மீன்கள்
சுறா, வாள்மீன், கிங் கானாங்கெளுத்தி மற்றும் டைல்ஃபிஷ் போன்ற சில வகையான மீன்களில் அதிகளவு பாதரசம் இருக்கலாம். இது உங்கள் குழந்தையின் வளரும் நரம்பு மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கும். அத்தியாவசிய ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களை வழங்கும் சால்மன், ட்ரவுட் மற்றும் மத்தி போன்ற குறைந்த பாதரசம் கொண்ட மீன்களைத் தேர்ந்தெடுக்கவும்.
5. ஒவ்வாமை உணவுகள்
குழந்தைகளுக்கு தாய்ப்பாலின் மூலம் சில உணவுகளுக்கு ஒவ்வாமை ஏற்படலாம். எனவே வேர்க்கடலை, நட்ஸ்கள், மட்டி மற்றும் முட்டை போன்ற ஒவ்வாமை உணவுகளில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். மேலும், உங்கள் குடும்பத்தில் ஒவ்வாமை வரலாறு இருந்தால், தாய்ப்பால் கொடுக்கும் போது இந்த உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.
இறுதிக் குறிப்பு:
உங்கள் குழந்தையின் நல்வாழ்வை உறுதிப்படுத்த உங்கள் உணவை கவனமாக பரிசீலிக்க வேண்டிய ஒரு சிறப்பு நேரம் தாய்ப்பால். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆரோக்கியமான உணவு ஆரோக்கியமான குழந்தைக்கு வழிவகுக்கும். எனவே தகவலறிந்த தேர்வுகளை செய்து, உங்கள் குழந்தையுடன் இந்த அழகான பிணைப்பு அனுபவத்தை ஒவ்வொரு தாய்மார்களும் அனுபவியுங்கள்.