விடுகதைகள்
- Editor
- Category: விடுகதைகள்
- Hits: 511
1. ஒற்றைக்கால் பந்தலில் ஊரெல்லாம் தங்கலாம் - அது என்ன?
- [ஆலமரம்]
2. முரட்டு மனிதனுக்கு முப்பத்திரண்டு பேர் காவல் - அது என்ன?
- [நாக்கு]
3. நடந்தால் நடக்கும், நின்றால் நிற்கும் - அது என்ன?
- [நிழல்]
4. உயிரற்ற பறவை, ஊர் ஊராய் பறக்கும் - அது என்ன?
- [விமானம்]
5. விறகெரியத் துணையாகும், விளக்கெரியப் பகையாகும் - அது என்ன?
- [காற்று]
6. நம்மைப்போல் இருக்கும், நாம் இறந்தாலும் இறக்காது - அது என்ன?
- [புகைப்படம்]
7. தலையில் வைக்க முடியாத பூ, சமையலுக்கு உதவும் பூ - அது என்ன?
- [வாழைப்பூ]
8. தோகைபோல உடம்புக் காரி, துப்புரவு தொழிலுக்கு கெட்டிக்காரி - அவள் யார்?
- [துடைப்பம்]
9. ஆயிரம் அறைகள் அரண்மனையில், ராணியின் ஆட்சி - அது என்ன?
- [தேன்கூடு]
10. நூல் நூற்கும் ராட்டை அல்ல, வலை பின்னும் மீன் பிடிக்க அல்ல - அது என்ன?
- [சிலந்திப் பூச்சி]