மூன்றுபேரின் மரபணுக்களில் உருவான முதல் குழந்தை!
- admin
- Category: விஞ்ஞானம்
- Hits: 454
மூன்று பேரின் மரபணுக்களைக் கொண்டு கருத்தரிக்கும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம் உருவான முதல் குழந்தை பிரசவிக்கப்பட்டிருக்கிறது என்று அமெரிக்காவில் உள்ள விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
ஒரு குழந்தையை உருவாக்க மூன்றுபேரின் மரபணுக்களில் இருந்து கருத்தரிக்கச் செய்யும் முறை ஒன்றை அமெரிக்க மருத்துவர்கள் முதல் தடவையாக செய்திருக்கிறார்கள்.
தனது தாய் மற்றும் தந்தையின் மரபணுக்களை கொண்ட அந்த ஆண் குழந்தை மூன்றாவது கொடையாளி ஒருவரின் மரபணு மூலக்கூற்றையும் கொண்டிருக்கும். தனது தாயின் மூலம் அந்தக் குழந்தைக்கு வரக்கூடிய சில
இந்த சிகிச்சை முறை மருத்துவத்தில் புதியதொரு சகாப்தத்தை உருவாவதைக் காட்டுகிறது என்றும், உடற்குறைபாட்டை தவிர்க்க இந்த முறை உதவும். அபூர்வமான மரபணு குறைபாடுகளைக் கொண்ட ஏனைய குடும்பங்களுக்கும் இது உதவும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
ஆனால் `மிட்டொகோண்ட்ரியல்` நன்கொடை (mitochondrial donation) என்றழைக்கப்படும் இந்த சர்ச்சைக்குரிய புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுமுன், கடுமையான சோதனைகள் செய்யப்பட வேண்டியது அவசியம் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.