செவ்வாயில் 4-வது பிறந்த நாளை கொண்டாடும் விண்கலம்
- Editor
- Category: விஞ்ஞானம்
- Hits: 333
வாஷிங்டன் - பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன. அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’, செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி என்ற விண்கலத்தை இறக்கி உள்ளது.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் 2012ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அவ் விண்கலம் செவ்வாயில் தரையிறங்கியது. இதனால் இவ்வருடம் ஆகஸ்ட் மாதத்தோடு செவ்வாயில் கியூரியோசிட்டி விண்கலம் தரயிறங்கி நான்கு ஆண்டுகள் ஆகிறது. ஆனால் செவ்வாயில் இருந்து பார்க்கும்போது இரண்டு ஆண்டுகள் தான் ஆகப்போகின்றது.
இதற்கு காரணம் செவ்வாயின் சுழற்சிக்கு எடுக்கும் காலமானது நமது பூமியின் சுழற்சிக்கு எடுக்கும் காலம் இரண்டு மடங்காகும். அதாவது 687 நாட்களாகும். இந்த விண்கலமானது செவ்வாயிலிருந்து செல்பிக்கள் உட்பட பல புகைப்படங்களை ஆதாரமாக பூமிக்கு அனுப்பியிருந்தது. எனினும் முதன் முறையாக தனது நான்காவது பிறந்த நாளில் செவ்வாயின் காலநிலை அறிக்கையையும் வழங்கியுள்ளது. இதன்படி பகல் நேரங்களில் வெப்பநிலை சராசரியாக 15.9 டிகிரி செல்சியஸ் ஆகவும், இரவு நேரங்களில் -100 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கின்றது.