கோபத்திற்கு காரணமாகும் தூக்கம்: ஆய்வில் எச்சரிக்கை!
- Editor
- Category: உடல் நலம்
- Hits: 313
நித்திரைக் குழப்பம் மற்றும் அதிக நேரம் தூங்குதல் போன்றன கோப வியாதிக்கு காரணமாகலாம் என ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.
போதியளவான தூக்கமின்மையானது லண்டன் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களினால் தொற்று நோயாக கருதப்படுகிறது.
உணவு முறை, உடற்பயிற்சியுடன் ஒன்று சேர்ந்து நித்திரை பழக்கவழக்கமும் உருவரின் உடல் நிலையை பாதிக்கின்றது என Michael Irwin சொல்கிறார்.
பொதுவான நித்திரை குழப்பம், தூக்கமின்மை அழற்சிகளை ஏற்படுத்தி, மரணங்களுக்கும் காரணமாகலாம் எனவும் சொல்லப்படுகிறது.
கோபமானது குருதியில் C-reactive protein (CRP), Interleukin-6 (IL-6) இன் அளவை கூட்டுகின்றது. இவ்வாறான பதார்த்தங்கள் உடல் நலத்திற்கு, இதய ஆரோக்கியத்திற்கு கேடாகின்றது.
அத்துடன் இவை உயர் குருதியமுக்கம், வகை – 2 நீரிழிவு நோய்களையும் ஏற்படுத்துகின்றது. சாதாரண நித்திரைக் கால அளவு 7 – 8 மணித்தியாலங்கள் வரையாகும். இதைவிட குறைவான மற்றும் கூடுதலான தூக்கம் CRP, IL-6 இன் அளவு அதிகரிக்க காரணமாகின்றது.