Switch Language:   English | தமிழ்

    ஆரோக்கியம்: வாழைப் பழத்தின் நன்மைகள்.

    resize_20100717164130

    ஏழைகளின் கனி என பல நூறாண்டுகளாக விரவி வரும் வாழை பழத்தில் மிகப் பல ஆரோக்கிய குணாதிசயங்கள் உண்டு என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. மேம்போக்காக, வாழை பழம் மலச்சிக்கல் தீர்க்க உதவும் என்பது தவிர வாழை பழத்தின் நன்மைகள் பல நாம் அறியாதது. வலைதளங்களில் மேய்ந்து கொண்டிருந்த போது கண்ணில் பட்ட வாழைப்பழ நன்மைகள் இந்த பதிவில் தொகுக்கபடுகின்றன.

     

    1. மனச்சோர்வு (Depression) குறையும்:
    சமீபத்தில் மைன்ட் என்ற அமைப்பினர் நடத்திய ஆய்வில், மன அழுத்தம் உடையவர்கள், வாழைப்பழம் உண்டபின் மிக இளைப்பாறுதல் தெரிவதாக அறிவித்துள்ளனர். அதற்க்கு காரணம், வாழைப்பழத்தில் உள்ள திர்ய்ப்டோபன் (tryptophan) என்ற புரத சத்து நமது மூடை மாற்றி, மகிழ்ச்சியாகவும் ரெலாக்சாகவும் வைக்க உதவுகிறது. இதன் மூலம் மனச்சோர்வு குறைவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

    2.அனிமியா: இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் வாழைப்பழம், ரத்தத்தில் உள்ள ஹீமொக்லோபின்கள் அதிகரிக்க உதவி ரத்த சோகையை தீர்க்க உதவுகிறது.
    3. இரத்த அழுத்தம்: வாழை பழத்தில் பொட்டசியம் அதிகமாகவும், உப்பு சத்து குறைவாகவும் உள்ளதால், இரத்த அழுத்தம் தீர வழி வகுக்கிறது. அமெரிக்காவின் உணவு மற்றும் மருத்துவ கழகத்தின் சிபாரிசில், வாழைப்பழம் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்புக்கு எதிரானது என அறிவிக்கப்பட்டுள்ளது.

    4. புத்தி கூர்மை: வாழை பழத்தில் பொட்டசியம் சத்து அதிகம் இருப்பதால், புத்தி கூர்மைக்கு உதவுகிறது என சமீபத்தில் மிடில் செக்ஸ் என்ற பள்ளி மாணவர்களிடம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    5. மலச்சிக்கல்: இது நாமனைவரும் அறிந்த ஒன்று தான். மலச்சிக்கல் உள்ளவர்களிடத்தில் நார் சத்து அதிகம் உள்ளதால், வாழைப்பழம், சிறந்த மலம் இளக்கியாக செயல்படுகிறது.

    6. நெஞ்சரிப்பு: ஏதாவது காரமாக சாப்பிட்டுவிட்டு நெஞ்சரிப்பு என சொல்கிறவர்கள் ஒரு வாழைப்பழத்தை சாப்பிடவும். சாப்பாட்டு அமிலங்களை இளக்கி நெஞ்சரிப்பு தீர உதவும்.
    7. கொசுக்கடி: வாழைபழ தோலின் உள் பக்கத்தை நமது தோலில் தேய்த்தால், கொசுக்கள் நம்மிடையே வராது என ஆய்வுகள் கூறுகின்றன.
    8. நரம்புகள்: வைட்டமின் B சத்து மிகுதியாக இருப்பதால், வாழைப்பழம் நமது நரம்புகளுக்கு நல்லது.
    9. உடல் பருமன்: இப்போதைய கால் சென்டர் மற்றும் ஐ டி மக்கள், தங்களது மூளையை கசக்கி வேலை செய்வதால், அவர்களுக்கு உடல் பயிற்சி இல்லாத காரணத்தால், நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடுவதால், அதிகம் பசி எடுத்து, அதிகம் சாப்பிட்டு உடல் பருமன் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இரண்டு மணி நேரத்துக்கு ஒருமுறை வாழைபழம் உட்கொண்டால், இரத்தத்தில் உள்ள க்ளுகோஸ் அளவு சீராக இருக்கும். எனவே பசியும் குறைவாகவே இருக்கும்.

    10. அல்சர் அல்லது வயிற்றுப் புண்: வயிற்றில் உள்ள பல வியாதிகளுக்கு வாழைபழம் அருமருந்து. அல்சர் வியாதி உள்ளவர்கள், வயிற்றின் ஓரத்தில் அமிலத்தின் சுவடுகள் ஒளிந்திருக்கும். வாழைப்பழம் அந்த அமிலத்தை சாந்தப்படுத்துவதால், வயிற்றின் அலறல்களில் இருந்து அவர்கள் தப்பிக்க இயலும்.

    11, மன அழுத்தம் (Stress). வாழைப்பழத்தில் பொட்டசியம் தாதுப்பொருள் மிகுதியாக இருப்பதால், இதயத்துடிப்பை சீராக்குகிறது,ஆக்சிஜெனை மூளைக்கு அனுப்பி, நீர் அளவை நேரான அளவில் வைக்க உதவுகிறது. நம்மில் மன அழுத்தம் நேர்கிற போது நமது மெடபாலிக் அளவுகள் அதிகமாக, பொட்டசியம் அளவு குறைகிறது. அதனை அதிகரிக்க வைக்க வாழைப்பழம் உதவி மன அழுத்தத்தை குறைக்கிறது.
    12. மாரடைப்பு: “The New England Journal of Medicine,” என்ற பத்திரிகை நடத்திய ஆய்வில், வாழைப்பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால், மாரடைப்பை நாற்ப்பது விழுக்காடுகள் குறைக்க இயலும் என கூறுகிறது.
    உன்னிப்பாக கவனித்து பார்த்தால்தான் அதன் நன்மைகள் நமக்கு புலப்படுகின்றன.
    வழக்கப்படுத்துவோம் வாழைப்பழத்தை!