பெண்கள் பாதுகாப்பில் விழிப்புணர்வு அவசியம்
- Editor
- Category: கட்டுரைகள்
- Hits: 629
பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க விழிப்புணர்வு அவசியம். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.
பெண்கள் பாதுகாப்பில் விழிப்புணர்வு அவசியம்
சென்னையில் ஐ.டி. பெண் பொறியாளர் சுவாதி நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சுவாதி மட்டுமல்ல, காரைக்கால் வினோதினி, சில மாதங்களுக்கு முன்பு சிறுசேரியில் கொலை செய்யப்ப்பட்ட ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் உமா மகேஸ்வரி என இளம் பெண்கள் கொடூரமாக கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதன் காரணமாக இளம் பெண்கள் மட்டுமின்றி பள்ளி-கல்லூரி மாணவிகள் இல்லத்தரசிகள் போன்றோரின் பாதுகாப்பும் கேள்விக் குறியாக மாறியுள்ளது. சுவாதி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெண்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம் அவர் கொலையுண்ட இடம் ரெயில் நிலையம்.
இது மற்ற பொது இடம் போல் அல்ல. பாதுகாப்பு நிறைந்தது. ரெயில் நிலையத்துக்குள் செல்லும் போதும், வெளியே வரும் போதும் பயணச்சீட்டு அவசியம் பயணச்சீட்டு இல்லாமல் ரெயில் நிலையத்தில் நிற்க முடியாது. ஆனால் யார் வேண்டுமானால் ரெயில் நிலையத்துக்குள் வந்து சொல்லலாம் என்ற நிலையில்தான் ரெயில் நிலையங்கள் உள்ளன. எப்போதோ தான் டிக்கெட் பரிசோதகர் இருக்கிறார். டிக்கெட் பரிசோதனையை சரியாக கடைப்பிடித்தால் குற்றவாளிகளுக்கு பயம் வரும். பயணிகளுக்கு பாதுகாப்பு அச்சம் இருக்காது.
இதேபோல் பெண்களும் தங்களைத் தாங்களே பாதுகாக்க விழிப்புணர்வு அவசியம். தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ற படி செயல்பட வேண்டும். அத்துடன் கொஞ்சம் தற்காப்பு பயற்சியும் அவசியம். சுவாதி கொலைக்குப்பின் தற்காப்பு பயிற்சி வகுப்புகளுக்கு செல்லும் பெண்கள் அதிகரித்துள்ளனர். பெரும்பாலான பெற்றோர்கள் வேலைக்கு செல்லும் தங்களது பிள்ளைகளுக்கு பயிற்சி அளிக்க தற்காப்பு கலை பயிற்சி மையத்தில் பதிவு செய்து வருவதாக பயிற்சி மைய நிர்வாகிகள் தெரிவித்தனர்.