ஓநாயும் குரங்கும்
- Editor
- Category: கதைகள்
- Hits: 303
காட்டில் நல்ல பெயர் எடுத்திருந்த ஒரு ஓநாயின் மீது காட்டு ராஜா சிங்கத்திற்கு பொறாமையும் வெறுப்பும் வந்தது. ஒரு நாள், ஓநாயின் மீது கோபத்தின் உச்சிக்கே சென்ற சிங்கம், அதைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தது. ஓநாய் வசிக்கும் மரத்தடியில் வைத்து அன்று மாலையே அதைக் கொன்று விட போவதாக தனது இணையிடம் கர்ஜித்தது சிங்கம். இதை, மறைந்திருந்த ஒநாய் கேட்டு விட்டது. பயந்து போன ஓநாய் தனது நண்பனான குரங்கிடம் சென்றது.
சிங்கத்திடம் பேசி வெல்ல முடியாது என்று குரங்கு சொல்லியது. மேலும் தான், சிங்கம் வருவதற்கு முன்னே மரத்தில் ஏறி நின்று, பின் வந்ததும், அதன் மீது வலை வீசி , அடுத்து அதனை இழுத்துச் சென்று கிணத்தில் தள்ளிச் சாகடித்து விடலாம் என்று ஒரு யோசனையை ஓநாய்க்கு சொன்னது குரங்கு. ஒநாயும் அதற்கு சம்மதம் சொன்னது. மாலை வந்தது.
வலையுடன் மரக்கிளையில் குரங்கு தயாராக இருந்தது. ஓநாயும் தூங்குவது போல் நடித்துக் கொண்டிருந்தது. சிங்கம் வந்தது. ஓநாயிடம் நெருங்கியது. சுதாரித்த ஓநாய் மேல் நோக்கிப் பார்த்தது. குரங்கை திடீரென காணவில்லை. அடுத்த சில நொடிகளில் ஓநாயை வெறித் தனமாக தாக்கியது சிங்கம். மரணத்தை நெருங்கிய ஒநாய், குரங்கு துரோகம் செய்து விட்டதே என நினைத்துக் கொண்டே உயிரை விட்டது. சில நொடிகளில் ஒரு பெரிய பாம்பு ஒன்று அம்மரத்தின் அடர்த்தியான ஒரு கிளையில் இருந்து கீழே இறங்கியது.
ஒநாய் மற்றும் குரங்கு ஆகிய இரண்டும் செயல் படுத்துவதாக இருந்த திட்டத்தை, தான் கடைசி நேரத்தில் உணர்ந்ததாகவும் குரங்கை கொத்திவிட்டு விழுங்கியதாகவும் என சிங்கத்திடம் கூறி அதன் பாராட்டைப் பெற்றது பாம்பு. அடுத்தவர்களின், சூழ்நிலை தெரியாமல், அவர்கள் நமக்கு துரோகம் இழைத்து விட்டார்கள் என்றும் நம் மீது அக்கறை காட்ட வில்லை என்றும் நம்மில் பலரும் இப்படி குறை கூறுகிறோம். ஓநாய் செத்துப் போனது. நாம் செத்து செத்து வாழ்கிறோம்.