Documents களை களவாடும் Virus அட்டகாசம் : Computer Users ! Be Alert: : :
- MSF.Nadhwa
- Category: கணனி
- Hits: 894
தற்பொழுது கணனிகளைத் தாக்கக்கூடிய புதிய கணினி வைரஸ் அச்சுறுத்தல் குறித்து தகவல் வெளியாகியுள்ளதென இலங்கை கணினி அவசர செயற்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இந்த கணினி வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதென அந்தப் பிரிவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்த தெரிவித்துள்ளார்.
இந்த வைரஸ் மூலம் நிறுவனங்களின் கணினிகளில் உள்ள தகவல்கள் களவாடப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வைரஸால் ரஸ்யாவிற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள போதும் இலங்கைக்கு இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இதன் காரணமாக வைரஸ் காரணமாக வரும் ஜுலை மாதத்தில் உங்களது இணையதளம் தொடர்புகொள்ள முடியாமல் போகலாம் என்று Search Engine இணையதளமான Google எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வாறு வைரசால் பாதிக்கப்பட்ட கணினிகளை நாங்கள் சரிசெய்து தருகிறோம் என்று உலகம் முழுவதும், மோசடியாக விளம்பரம் ஒன்றை விஷமிகள் பரவவிட்டதை அடுத்து இந்த பிரச்சினை தொடங்கியுள்ளதாக Google தெரிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட கணினிகளில் அரசு கணினிகளை பாதுகாப்பதற்காக, சில மாதங்களுக்கு முன்பு பாதுகாப்பு வளையம் ஒன்றை அமெரிக்காவின் FBI அமைத்தது.
ஆனால் அந்த அமைப்பு ஜுலை 9-ம் திகதி அன்று, தனது பாதுகாப்பு வளையத்தை மூட உள்ளதால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இணையதள சேவை கிடைக்காது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
FBI சில மாதங்களாகவே விளம்பரம் ஒன்றை வெளியிட்டு வந்தது. அதில் ஒரு இணையதளத்தை பார்க்குமாறும், அதைப்பார்த்தால்தான் தங்கள் கணினி வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பது தெரிந்து விடும் என்று கூறியிருந்தது.
மேலும் அவ்வாறு பாதிக்கப்பட்டிருந்தால் அப்பிரச்னையை எப்படிக் கையாள்வது என்றும் தெரிவித்திருந்தது.
அவ்வாறு வைரசால் பாதிப்புக்கு உள்ளான கணினிகள் ஜுலை 9-ம் திகதிக்குப் பின்னர் இணையதளத்தை தொடர்புகொள்ள முடியாது என்று Google தற்போது எச்சரிக்கை விடுத்துள்ளது.
>AD