Switch Language:   English | தமிழ்

    25 விரல்களுடன் ஆண் குழந்தை

    திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அடுத்த பெத்தவேளாண்கோட்டகம் கிராமத்தை சேர்ந்த சித்ராவிற்கும்(25) மன்னார்குடி அடுத்த கோவில் கலப்பால் கிராமத்தை சேர்ந்த பகத்(33) ஆகியோருக்கு கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 17ம் திகதி திருமணம் நடந்தள்ளது.

    திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆகியும் சித்ராவுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. இந்நிலையில் பல கோயில்களின் வேண்டுதலுக்கு பின்பு கடந்த ஆண்டு சித்ரா கர்ப்பமானார்.

    இதனைத் தொடர்ந்து கடந்தத 16ம் திகதி சித்ராவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதும் மன்னார்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 17ம் திகதி ஆண் குழந்தை பிறந்தது. நல்ல சிகப்பு நிறத்தில் பிறந்த குழந்தையின் வலது கையில் 7 விரலும், இடது கையில் 6 விரலும், இரு கால்களிலும் தலா 6 விரலும் ஆக மொத்தம் 25 விரல்கள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இது குறித்து குழந்தையின் தந்தை பகத் கூறுகையில், எனது குழந்தையின் அதிசியத்தை கண்டு மிகுந்த சந்தோஷத்தில் இருக்கின்றோம். எனது சகோதரர் மோகனின் மகனுக்கும் தலா ஆறு விரல்கள் வீதம் 24 விரல்கள் உள்ளன என்றார். மேலும் இந்த அதிசிய குழந்தை எங்கள் கிராமத்திற்கு கிடைத்த பொக்கிஷம்.
    இதனால் எங்கள் கிராமமே மகிழ்ச்சியில் இருக்கிறோம் என்று கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். பகத் மற்றும் சித்ரா தம்பதியினரின் திருமண திகதி 17 இந்த அதிசிய குழந்தை பிறந்த தேதியும் 17 என்பது குறிப்பிடத்தக்கது.