தமிழகத்தில் 30 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரம்!
- Editor
- Category: தகவல்கள்
- Hits: 370
தமிழகத்தின், பட்டறைப் பெரும்புதூர் கிராமத்தில் 30 ஆயிரம் ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்த்தற்கான சான்று கிடைத்திருப்பதாக தமிழக அரசின் தொல்லியில் துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு அருகிலேயே குறித்த பட்டறைப் பெரும்புதூர் கிராம் அமைந்துள்ளது. கடந்த ஆண்டு முதல் தமிழக தொல்லிய துறையின் இங்கு அகழ்வாராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து தமிழக தொல்லியல் துறை துணை இயக்குனர் கூறியதாவது, பட்டறைப் பெரும்புதூரில் உள்ள ஆனைமேடு, நத்தமேடு, இருளந்தோப்பு ஆகிய இடங்களில் மொத்தம் 12 ஆய்வுக் குழிகள் தோண்டப்பட்டு நடத்தப்பட்ட ஆய்வில் 200க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.
மேலும், கற்காலம் (கி.மு. 30,000 – கி.மு. 10,000) முதல் மனிதர்கள் வாழ்ந்ததற்கான மண் அடுக்கச் சான்றுகளும் கிடைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுவரை தமிழகத்தில் கடலோரப் பகுதிகளில்தான் ரோமானிய மட்பாண்ட வகைகள் கிடைத்திருப்பதாகவும் முதன் முதலாக இப்போதுதான் உள்பகுதியில் இம்மாதிரி மட்பாண்டம் கிடைத்திருப்பதாக தெரிவித்துள்ளார்.