உங்களை உளவு பார்ப்பவர்களை சமாளிப்பதற்கான குறிப்புகள் !
- admin
- Category: ஆலோசனை
- Hits: 121
உளவு பார்த்தல் என்பது தவறான பழக்கம் என்று நம் மனதில் பதிந்தவிட்ட ஒரு விஷயமாகும். ஆனால் உளவு பார்த்தல் என்பது தனி மனித முன்னேற்றத்திற்கு அவசியம் என்றால் நம் அனைவருக்குமே ஆச்சரியமாக இருக்கும்.
? நட்பு, பணி, மற்றும் எதிர்ப்பு ஆகிய மூன்று வட்டங்களுக்குள் தான் நமது உலகமே இருக்கிறது. இந்த உறவுகளை சரியாக மேலாண்மை செய்ய வேண்டும். இந்த மூன்று வட்டங்களில் உள்ளவர்கள் ஒவ்வொருவரும் நமக்குகேற்றவாறும் கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறும், ஒவ்வொரு விதமாக செயல்படுவார்கள்.
? இவர்கள் நமக்கு சாதகமாக நடக்கிறார்களா? பாதகமாக நடக்கிறார்களா? அல்லது நடுநிலையில் நடந்து கொள்கிறார்களா? என்பதை அறிந்து கொள்ள வேண்டும். இல்லையெனில், நாம் செய்ய நினைக்கும் பல செயல்களை நம்மால் வெற்றிகரமாகச் செய்து முடிக்க முடியாது.
? ஆகவே தான் உளவு பார்க்கும் செயல் தனி மனித முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல தனி மனித பாதுகாப்பிற்கும் அவசியமாகிறது. மேலும், இந்த உளவு பார்க்கும் முறையை தெரிந்து கொண்டவர்களே தங்களது நிலைப்பாட்டினை தக்க வைத்து வெற்றி அடைந்திருக்கின்றார்கள்.
? சரி, இந்த மூன்று வட்டத்தினரையும் உளவு பார்ப்பதற்கான மூன்று முறைகளை அறிந்துக் கொள்வோம். அவை, நாமே உளவு பார்ப்பது, மற்றவர்கள் மூலம் உளவு பார்ப்பது மற்றும் நமது நிலைப்பாட்டை கூறுபவர்களை அடையாளம் காண்பது ஆகும்.
உளவாளிகளை பற்றி அறிந்துக் கொள்வதற்கான குறிப்புகள் :
? நமது மூன்று வட்டங்களில் உள்ளவர்களுக்கு என்ன பிடிக்கும், பிடிக்காது, எதில் திறமைசாலிகள், அவர்கள் எந்த முறையில் நம்மை உளவு செய்கின்றார்கள், அவர்களுக்கு உதவிகள் புரிபவர்கள், அவர்களுக்காக நம்மை உளவு பார்ப்பவர்கள் ஆகிய அனைத்தையும் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.
? இவர்கள் குழப்பத்திலோ அல்லது கலக்கத்திலோ இருக்கும்போது நாம் தொடர்பு கொண்டால் தங்களைப் பற்றிய உண்மைகளை கூற அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
? நம்மிடம் எப்படி நடந்து கொள்ளுகின்றார்கள் என்பதை பொறுத்தே நாம் அவர்களின் நிலைப் பாட்டினை அறிந்துக் கொள்ளலாம்.
? மற்றவர்களின் கொள்கைகளை ஏற்பது போல் பேசி, அவர்களை பற்றி தெரிந்து கொள்ளலாம். இல்லையெனில், அவர்களது கொள்கைகளை எதிர்ப்பது போல பேசி அவர்களது மனதில் உள்ளதையும், அவர்களது நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ளலாம்.
? சுருக்கமாகக் கூறினால் அடுத்தவர்களின் எண்ண ஓட்டத்தை அறிந்து, அதற்கு ஏற்றவாறும், நமது வாழ்விற்கு அதனை பயன்படுத்தும் வகையிலும் நமது திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்பொது நமது வெற்றி எளிதாகின்றது.
உளவு பார்க்க சில குறிப்புகள் :
? நீங்கள் உளவு பார்க்கும் அதே சமயம் நாமும் பிறரால் உளவு பார்க்கப்படுகின்றோம் என்ற எச்சரிக்கை இருக்க வேண்டும்.
? ஒருவர் உங்களிடம் தனிமையில் ரகசியம் கூறவிரும்புகிறார் என்றால், அவர் உங்களைப் பற்றிய ஒரு உண்மையை தெரிந்து கொள்ள முயற்சி செய்கிறார் என்பது பொருள். எனவே, எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டிய தருணம் அது.
? பலருடன் மகிழ்ச்சியாக உரையாடும் பொழுது, ஒருவர் அவரின் பெருமையை கூறுகிறார் என்பதற்காக நீங்களும் உங்கள் பெருமையை கூற ஆரம்பித்துவிடாதீர்கள்.
? சிலர் நம்மை உளவு பார்க்கின்றார்கள் என்பதைத் தெரிந்தே உண்மையை மறைத்து பொய்யை உரைப்பார்கள்.