எண்ணங்கள், அனைத்தையுமே மாற்றிவிடும்!
- admin
- Category: ஆலோசனை
- Hits: 95
நமது தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி தொழில் வாழ்க்கையானலும் சரி நாம் நிறைய நிகழ்வுகளை சந்திக்கின்றோம். அவை அனைத்துமே நாம் நினைக்கும் வண்ணம் நடப்பதில்லை. ஆனாலும், இவற்றில் இருந்து விடுபட்டு அடுத்தக் கட்டத்திற்கு முன்னேறி விடுகிறோம்.
? அந்த முன்னேற்றமானது முன்னோக்கி செல்கிறதா? அல்லது பின்னோக்கி செல்கிறதா? என்பது நமது எண்ணங்களை பொறுத்தே அமைகிறது. அப்படியெனில் நமது எண்ணங்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைப் பற்றி அறிந்துக் கொள்வோம்.
? கவலைப்படுவதால் எந்த பிரச்சனையும் சரியாகப்போவதில்லை. மாறாக, அது இன்றைய மகிழ்ச்சியை அழித்துவிடுகிறது. எனவே, நாளை வருவதை நாளை பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணி, இன்றைய நாளின் மீது கவனம் செலுத்துங்கள்.
? ஏதேனும் கசப்பான நிகழ்வுகள் நடந்தால், காலையிலேயே இப்படியா? அப்படியென்றால் இன்றைய நாள் எப்படி இருக்க போகிறதோ? என்று எண்ணாதீர்கள். இந்த எண்ணமானது மகிழ்ச்சியான தருணங்களைக் கூட வெறுமையானதாக மாற்றிவிடும்.
? பிறரிடம் உதவியை எதிர்பார்ப்பது இயல்புதான். ஆனால் அந்த நபர் உங்கள் எதிர்பார்ப்புக்கு உரியவரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் அவர் அளிக்கும் ஏமாற்றம் உங்கள் மனதில் தேவையற்ற எதிர்மறை எண்ணங்களை நீந்தச் செய்துவிடும்.
? எப்போதும் நேர்மறை எண்ணங்கள் நிறைந்த சூழலில் இருக்க முயற்சி செய்யுங்கள். அந்த சூழலானது என்ன தான் நடந்துவிடும்? பார்த்துக்கொள்ளலாம் என்று உங்களது பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் அளிக்கிறது.
? என்ன இது? பிரச்சனைகள் வந்துக் கொண்டே இருக்கிறது? எவ்வளவு தான் சமாளிப்பது? என்று நாம் பிரச்சனைகளை நினைத்து கவலைப்பட்டு கொண்டு இருக்கிறோம்.
? ஆனால் பிரச்சனைகளுக்கான தீர்வு கவலைப்படுவதில் இல்லை. அதற்கான தீர்வு நமது மாற்றத்தில்தான் இருக்கிறது. அதாவது நாம் சூழ்நிலையை மாற்ற வேண்டும் அல்லது சூழ்நிலைக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும்.
? மற்றவர்களுக்கு நாம் நல்லவராக இருப்பது முக்கியம்தான். ஆனால், அதைவிட மிக முக்கியம், நமக்கு நாமே நல்லவராக இருப்பதுதான்.
? எப்பொழுதும் நம்மைவிட மற்றவர்களே உயர்வானவர்கள் என்று எண்ணுகிறோம். இது நம்மைவிட பிறர் மீது வைத்திருக்கும் அதிகப்படியான நம்பிக்கையைத்தான் குறிக்கிறது. எனவே, நம்மை விட சிறந்தவர் எவரும் இல்லை என்ற எண்ணத்துடன் ஓர் காரியத்தில் இறங்கும்பொழுது அதில் வெற்றி அடைகிறோம்.
? நடந்து முடிந்தவற்றைப் பற்றி கவலைப்படாமல் இருப்பது, நடப்பதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வது, நடக்கப்போவதை நினைத்து நம்பிக்கைக் கொள்வது - இந்த மூன்று மந்திரங்கள் உங்கள் வாழ்க்கையை வளமாக்கிவிடும்.