ஆளுமையை பெறுவதற்கான குறிப்புகள்!
- admin
- Category: ஆலோசனை
- Hits: 95
அனைவரும் விரும்பும் வகையில் நமது ஆளுமையை மேம்படுத்திக் கொள்வதற்கான சில குறிப்புகளைப் பற்றி இன்று அறிந்துக் கொள்வோம்.
பொதுவாகவே, நம் அனைவருக்கும் தனிப்பட்டக் கருத்துக்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றைக் கொண்டு மற்றவர்களை மதிப்பிடக் கூடாது.
வெளித்தோற்றம் என்பது இயற்கையானது. ஆகையால், அதை வைத்து யாரையும் மதிப்பீடு செய்யாதீர்கள். அவர்களுடன் பழகிய பிறகே நீங்கள் முடிவு செய்ய வேண்டும்.
ஒருவர் நம்மிடம் கூறும் விஷயங்களை உற்று கவனிக்க வேண்டும்.
எல்லோருக்கும் தலைக்கனம் இருப்பது என்பது இயல்புதான். அதற்காக பிறரை வெறுத்து ஒதுக்கக் கூடாது.
எப்பொழுதும் குறைவாகப் பேசி பழகுங்கள். இந்த பண்பு உங்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக் கொள்ள உதவும்.
பிறரிடம் நீங்கள் கேள்வி கேட்டப்பின் முதலில் அவர் என்ன கூறுகிறார் என்பதை பொறுமையாக கவனியுங்கள். அதை விடுத்து, உடனடியாக நீங்களே பதிலைக் கூற முற்படாதீர்கள்.
பிறரின் நேரத்தை நீங்களும் வீணாக்காதீர்கள். பிறர் உங்களுடைய நேரத்தை வீணாக்கவும் அனுமதிக்காதீர்கள்.
ஒருவருக்கு நீங்கள் உதவி செய்ய முற்படும் பொழுது, அதில் சிறிது சந்தேகம் இருந்தாலும், உதவிச் செய்ய ஒப்புக்கொள்ளாதீர்கள்.
உங்களிடம் பணிபுரியும் ஊழியர்களிடம் முடிவு செய்வதற்கும், எடுத்த முடிவை மாற்றுவதற்கும், கொடுத்த வேலையை முடிப்பதிலும் முழுச்சுதந்திரத்தை நீங்கள் கொடுக்க வேண்டும்.
பிறரிடம் பழகும்பொழுது நட்புறவுடன் பழகுங்கள். இது உங்கள் மீதான நன்மதிப்பை உயர்த்திவிடும்.
ஒருவர் செய்த செயல் சிறப்பாக இருக்கும் பொழுது அவரை முழுமனதுடன் பாராட்ட வேண்டும். அதை விடுத்து, சம்பிரதாயத்துக்காக பாராட்டாதீர்கள்.
நாம் அனைவருமே சில சமயங்களில் தவறுகள் செய்கிறோம். ஒருவேளை உங்களிடம் பணிபுரிபவரோ அல்லது சக பணியாளர்களில் ஒருவரோ தவறு செய்தால் அதை மனித்து விடுங்கள். மீண்டும் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று மட்டும் கேட்டுக்கொள்ளுங்கள்.
உங்களைச் சுற்றி இருப்பவர்கள் தான் உங்களது உலகமே என்பதை புரிந்துக் கொள்ளுங்கள். ஆகையால் அவர்களுடனான உங்கள் உறவை எப்பொழுதும் தக்க வைத்துக் கொள்ள முயற்சியுங்கள்.
எப்பொழுதும் உண்மையாக நடந்துக் கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் தவறு இழைத்தீர்கள் என்றால் அதை ஒப்புக்கொள்ளத் தயங்காதீர்கள். இந்த பண்பு உங்களின் உண்மைத் தன்மையை உணர்த்திவிடும்.