எமது முடிவுகளே எமது வெற்றியை தீர்மானிக்கின்றது
- admin
- Category: ஆலோசனை
- Hits: 111
? ஒருவர் அடையும் வெற்றி என்பது அவர்களின் செல்வத்தையோ அல்லது அறிவுத்தன்மையை பொறுத்தோ அமைவதில்லை. அவர்கள் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்தே அமைகிறது. முடிவு எடுக்கும் திறமை என்பது அனைத்து நேரங்களிலும், அனைத்து சூழ்நிலைகளிலும் அனைவருக்கும் சாதகமாக இருக்காது. ஆனால், வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறுவதாக இருந்தாலும் சரி, சரிவுப் பாதையில் இறங்குவதாக இருந்தாலும் சரி, ஒருவர் எடுக்கும் முடிவுகள் மட்டுமே காரணமாக அமைகிறது.
? முடிவு எடுத்தல் என்பது தனி நபர் சார்ந்ததாக இல்லாமல், கொள்கை மற்றும் நிறுவனம் தொடர்புடையதாக இருந்தால் நீங்கள் தொழில் வாழ்க்கையில் மென்மேலும் வளர்ந்துக் கொண்டே போகலாம்.
? முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்வதற்கான செயல் முறைகளைப் பற்றி இன்று அறிந்துக் கொள்வோம்.
? எந்தவொரு பிரச்சனையையும் சரியாக உருவகித்தப்பின் அதற்கான தீர்வுகளை மேற்கொள்ளும் செயல்முறையிலேயே நிறைய பிரச்சனைகள் தீர்ந்துவிடும். ஒருவருடைய அனுமானம், இலக்கு, அனுபவம் மற்றும் எதிர்பார்ப்புகள் ஆகியவை பிரச்சனைகளை சரியான முறையில் உருவகிப்பதற்கு பெரிதும் உதவுகிறது.
? நல்ல முடிவுகளை எடுக்கும் திறன் என்பது மாறுபட்ட கருத்துகளைக் கேட்டறிந்து அவற்றை ஆராய்ந்த பின்னர் எடுக்கும் தெளிவான முடிவு ஆகும். இந்த மாறுப்பட்ட கருத்துக்கள், ஒரு குழுவில் இருந்தோ அல்லது மாறுபட்ட கருத்துகளை ஏற்றுக்கொள்ளக்கூடிய மனப்பாங்கு உடையவர்களிடம் இருந்தோ அல்லது வித்தியாசமான அணுகுமுறை உடையவர்களிடம் இருந்தோ தான் வெளிப்படும்.
? சில நேரங்களில் தனித்து முடிவுகளை எடுப்பதைவிட மற்றவர்களுடன் கலந்து எடுக்கக்கூடிய முடிவுகளே சிறப்பானதாக இருக்கும்.
? சில சமயங்களில் முடிவெடுப்பதை காட்டிலும் அதை செயல்படுத்துவதில் அதிக சிக்கல்கள் இருக்கும். அது மட்டுமின்றி, முடிவு எடுப்பதைக் காட்டிலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முடிவை செயல்படுத்துவது இன்றியமையாதது ஆகும்.
? உறுதியில்லாத அல்லது நிச்சயமற்ற முடிவுகள் பிரச்சனைகளுக்கு ஆதாரமாகும். எதிர்காலத்தை முன்னிட்டு முடிவுகளை எடுக்கும் பொழுது, நிகழக்கூடிய செயல்களுக்கான உண்மையான காரணிகளையும் அது தொடர்பான தகவல்களையும் முழுமையாக பெறுவதற்கான சாத்தியங்கள் குறைவாக இருக்கும். ஆயினும் நிச்சயமற்ற தன்மையின் வெளிப்பாடு ஒரு நல்ல முடிவை எடுப்பதற்கு காரணியாக அமையும்.
? முடிவுகள் எடுப்பது மட்டும் இல்லாமல் அவற்றை தொடர்ந்து மேம்படுத்துதல் அவசியம் ஆகும். நிறுவன அளவில் முடிவுகள் எடுக்கும் பொழுது, எடுத்த முடிவுகள் எந்த அளவுக்கு சரியானதாக அமைந்துள்ளது என்பதைப் பற்றிய மறுமதிப்பீடு மேற்கொள்ளுதல் மிக அவசியம்.
? எடுத்த முடிவை விட சிறப்பான முடிவை எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்று சிந்திப்பதும் சிறப்பானதாகும். முடிவெடுத்தாலும் கூட கருத்துக்களையும், காரணிகளையும், சூழ்நிலைகளையும் தொடர்ந்து அறிந்துக் கொண்டே வர வேண்டும். இவை மீண்டும் முடிவுகள் எடுக்கும்பொழுது பயனுள்ளதாக இருக்கும்.
? சில சமயங்களில், முடிவுகளே எடுக்காமல் காலம் தாழ்த்துவதை விட, முடிவு எடுத்து அதன் விளைவுகளை சந்தித்து, அதன் மூலம் அறிவு சார்ந்த முடிவுகளை மேற்கொள்ள பழகிக் கொள்ளவேண்டும்.