படிப்பில் கவனித்தல் என்றால் என்ன?
- MSF.Nadhwa
- Category: ஆலோசனை
- Hits: 992
நாம் கற்பிக்கும் பாடத்தில் கவனம் செலுத்துவது ஆசிரியரது முக்;கிய பொறுப்பாகும். ஏனெனில் ஆசிரியர் எவ்வளவுதான் நன்றாக திட்டமிட்டுத் திறன்படக் கற்பித்தாலும் அவரது சொற்களையும், செயல்களையும் மாணவர்கள் நன்கு கவனிக்காமல் போனால், அவரது முயற்ச்சி எந்த வித பயனையும் தராது.
திறன் மிக்க ஆசிரியர் ஒருவர் பாட அறிவு மாத்திரமின்றி நாம் கற்பிக்கும் பாடத்தில் மாணவர்களின் கவனம் பதியும் வகையில் அதனைக் கற்பிக்கும் திறன் பெற்றிருத்தல் அவசியம். ஆகையால் கவனத்தின் இயல்புகள் பற்றிய அறிவு ஆசிரியர்களுக்கு இன்றியமையாததே. இது சிறந்த நடைமுறைப் பயனையும் கொண்டது. இவ்வறிவு எல்லோருக்கும் அவசியம் என்றும் கூறலாம். கவனித்துச் செயற்படுதல் ஒருவனது கற்கும் திறனையும், நினைவாற்றலையும் அதிகப்படுத்தவல்லது. கவனம் என்பதை விட கவனி;த்தல் (Attending) என்ற சொல் இன்று பொருத்தமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் இது மனதின் செயலாகும்.
பொதுவாக, ஒரு மணி அல்லது இரண்டு மணிநேரம் தொடர்ந்து ஒரு பொருளைக் கவனித்து வந்தோம் என்கிறோம் ஆனால் இது சரியன்று. ஒரு பொருளின் பல்வேறு கூறுகளை மாறி மாறிக் கவனித்து வருதல் முடியுமே தவிரே, அப்பொருளின் தனிப்பட்ட ஒரு கூறினையே தொடர்ந்து கவனிப்பதென்பது முடியாத காரியம், ஏனெனில், தமது கவனம் மாறி மாறிக் கவனிப்பதிலெயே உருவாகும் தன்மையுடையது. பாட புத்தகங்களை மாணவர்கள் பல முறை நன்றாக வாசிப்பதனூடாகவே கவனிக்கும் ஆற்றலை உருவாக்கிக் கொள்ள முடியும்.
சிறந்த கவனிக்கும் ஆற்றலை மாணவர்கள் வளர்த்துக் கொள்வதன் மூலம் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினைப் பெற்றுக் கொள்ள உதவும். வகுப்பறைகளில் மாணவர்கள் தமது கவனத்தினை திசை திருப்பக் கூடிய விடயங்களிலிருந்து தம்மை முதலில் விடுவித்துக் கொள்ளல் வேண்டும். சில மாணவர்கள் ஆசிரியர் கற்பித்தலில் ஈடுபடும் வேளையில் அதனைக் கவனிக்காது தேவையற்ற விடயங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வது சிறந்த கவனிக்கும் ஆற்றலை உருவாக்காது.உற்று நோக்கல்
புலப்பயிற்ச்சியின் ஒரு சிறந்த பயன் நல்ல உற்று நோக்கும் திறனை மாணவர்களிடம் வளர்ப்பதாகும். உற்று நோக்கல் அல்லது கண்டறிதல் என்பது ஒழுங்கான கட்டுக்குட்பட்ட புலன் காட்சியாகும். நம் புலன்களைப் பாதிக்கும் பல பொருள்களுல் ஒன்றை மட்டும் நாம் தேர்ந்தெடுத்து அதைக் கவனத்துடன் கானல் உற்று நோக்கலாகும். உற்று நோக்கல் மூலம் ஒரு மாணவனின் நினைவில் நிற்கும் ஆற்றல் அதிகரிக்கின்றது. கற்ற பாடங்களை மீண்டும் மீண்டும் கற்பதற்கு உதவியாக அமைகிறது.
மாணவர்களிடம் உற்று நோக்கிக் கண்டறியும் திறன் வளர்ச்சியடைய ஆசிரியர்கள் பங்களிப்புச் செய்தல் அவசியம் ஏனெனில், இத்திறன் வாழ்கைக்கு இன்றியமையாத ஒன்றாகும்.