அபார கண்டுபிடிப்பு “சோலர் இலை”
- Editor
- Category: ஏனைய தொழில்நுட்பம்
- Hits: 329
தாவர இலைகள் இயற்கையாகவே சூரிய ஒளியில் இருந்து சக்தியைப் பிறப்பிக்கும் வல்லமை கொண்டவை என்பது அறிந்ததே.
இதனை அடிப்படையாகக் கொண்டு சூரிய சக்தியில் இருந்து மின்னைப் பிறப்பிக்கக்கூடிய சோலார் கலங்கள் உருவாக்கப்பட்டன.
ஆனால் தற்போது இவற்றினை விட வினைத்திறன் வாய்ந்த வகையில் சக்தியை பிறப்பிக்கக்கூடிய சோலார் இலை உருவாக்கப்பட்டுள்ளது.
இதனை ஹவார்ட் பல்கலைக் கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் இணைந்து உருவாக்கியுள்ளனர்.
இது தாவரங்களின் ஒளித்தொகுப்பினை விடவும் வினைத்திறன் வாய்ந்ததாக இருப்பதுடன், சூரிய சக்தியிலிருந்து மின் சக்தியினை பிறப்பிக்கும் மாற்று வழியாகவும் திகழ்கின்றது.
தவிர இதன் ஊடாக சூரிய ஒளியினை இரசாயனச் சக்தியாக மாற்றக்கூடிய வல்லமையும் இந்த சோலார் இலைக்கு இருப்பதாக Johannes Lischner என்பவர் குறிப்பிட்டுள்ளார்.