Switch Language:   English | தமிழ்

    சந்திரனில் பயிர்ச்செய்கை

    நாஸா நிறுவனம் சந்திரனில் பயிர்ச் செய்கையில் ஈடுபடுவதற்கான திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இந்த நூற்றாண்டின் விண்வெளி சாதனைகளில் குறிப்பிடத்தக்கதாக இது அமையுமென ஆய்வாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

    2015 ஆம் ஆண்டளவில் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக நாஸா அறிவித்துள்ளது.

    விண்வெளி தொடர்பான ஆராய்ச்சிகள் பலவற்றை வெற்றிகரமாக செய்து முடித்துள்ள அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாஸாஇ இத்திட்டம் தொடர்பான செயன்முறை கட்டங்களை வடிவமைத்து வருகிறது.

    அதன் அடிப்படையில் சந்திரனில் விதைக்கப்படும் விதைகள் மிகத் தீவிரமாக கண்காணிக்கப்படும். பூமியில் தாவரங்களின் வளர்ச்சிக்குத் தேவையான நீர்இகாற்று போன்றவற்றை பெற்றுக்கொடுப்பது அடுத்த கட்ட நடவடிக்கையாக நடைபெறும்.

    சந்திரனில் தாவரங்களுக்கான விதை நாட்டப்படும் அதே நேரம் பூமியிலும் விதை நாட்டப்பட்டு இரண்டினதும் வளர்ச்சி வீதம் மற்றும் அவற்றின் உள்ளீர்ப்பு குறித்து ஆராயப்படவுள்ளது.