பெண்கள் கர்ப்பத்தை தள்ளிப்போட செக்ஸ்க்கு பின் இந்த உணவுகளை சாப்பிட்டால் போதுமாம் தெரியுமா?
- Fathima Zahrah
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 115
திருமணமான பெரும்பாலான தம்பதிகளின் கனவு குழந்தையை பற்றியதாகத்தான் இருக்கும், ஆனால் சரியான திட்டமிடல் மற்றும் குழந்தை பெற தயாராக இருக்கும்போது குழந்தை பெறுவதுதான் அவர்களுக்கும் சரி, பிறக்கப்போகும் குழந்தைக்கும் சரி நல்லது.
தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க அல்லது கர்ப்பத்தை தள்ளிப்போட பல பெண்கள் பிற கருத்தடை மாத்திரைகள் அல்லது பிற முறைகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், சில ஆரோக்கியமான வழிமுறைகளின் மூலம் கருத்தடை மாத்திரை இல்லாமலோ அல்லது கருத்தடை முறை இல்லாமலோ அவர்கள் உடலுறவு கொள்ளலாம்.
தேவையற்ற கர்ப்பத்தைத் தடுக்க அதிர்ஷ்டவசமாக சில எளிய மற்றும் பயனுள்ள வீட்டு வைத்தியங்கள் உள்ளன. கர்ப்பத்தைத் தவிர்க்க, பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு பெண் அவற்றைப் பயன்படுத்தலாம். இந்த முறைகள் மிகவும் பயனுள்ளதாக இருந்தாலும், அதன் பிறகு நீங்கள் கர்ப்பமாக இருக்க மாட்டீர்கள் என்று 100% உறுதியாக இல்லாவிட்டாலும் அது குறைந்தபட்ச உறுதியை கண்டிப்பாக அளிக்கும். கர்ப்பத்தைத் தடுக்கும் சில பொருட்கள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
பப்பாளி
நீங்கள் பாதுகாப்பற்ற உடலுறவு வைத்திருந்தால், அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு முறை பப்பாளி சாப்பிடுங்கள். பப்பாளி கருத்தரிப்பதை அனுமதிக்காது மற்றும் உடலுறவுக்குப் பிறகு இயற்கையாகவே தேவையற்ற கர்ப்பத்தின் பிறப்புக் கட்டுப்பாட்டாக செயல்படுகிறது.
அன்னாசி
அன்னாசிப்பழத்தின் இயற்கையான பண்புகள் கரு உருவாகுவதைத் தடுக்கிறது மற்றும் உடலுறவுக்குப் பிறகு திட்டமிடப்படாத கர்ப்பத்தைத் தவிர்க்கிறது. உடலுறவுக்குப் பிறகு 2-3 நாட்களுக்கு தினமும் ஒரு பழுத்த அன்னாசிப்பழம் சாப்பிடுவது கர்ப்பத்தைத் தவிர்க்க உதவுகிறது
அப்ரிகாட்
அப்ரிகாட் அல்லது பாதாமி பழம் இயற்கையாகவே கருவைத் தடுக்கும் பழமாகும். இதைப் பயன்படுத்த, 1 கப் தண்ணீரில் சுமார் 100 கிராம் உலர்ந்த அப்ரிகாட் மற்றும் 2 தேக்கரண்டி தேன் சேர்க்கவும். இந்த கலவையை சுமார் 20 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும், அது நன்கு ஆறியவுடன் குடிக்கவும். இல்லையெனில், உங்கள் மாதவிடாய் தொடங்கும் வரை பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு ஒரு நாளைக்கு 5-10 அப்ரிகாட்களையும் சாப்பிடலாம்.
இஞ்சி
இஞ்சி மாதவிடாயைத் தூண்டும் மற்றும் கர்ப்பத்தைத் தடுக்கும் ஒரு பொருளாகும். எளிய தீர்வாக நீங்கள் இஞ்சி டீயை உட்கொள்ளலாம். கொதிக்கும் நீரில் நசுக்கப்பட்ட அல்லது அரைத்த இஞ்சியைச் சேர்க்கவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு, கலவையை வடிகட்டிக் குடிக்கவும். கர்ப்பத்தைத் தடுக்க ஒவ்வொரு நாளும் 2 கப் வலுவான இஞ்சி தேநீர் குடிக்கவும். இஞ்சி தேநீர் உங்களுக்கோ அல்லது உங்கள் உடலுக்கோ எந்த விதத்திலும் தீங்கு விளைவிக்காது, இதில் எந்த பக்க விளைவுகளும் இல்லை, மேலும் இது உங்கள் சருமத்திற்கு நல்லது, எடை குறைக்க உதவுகிறது மற்றும் மாதவிடாய் காலத்தை தூண்டுகிறது.
உலர்ந்த அத்திப்பழம்
உலர்ந்த அத்திப்பழங்கள் சிறந்த இயற்கை கருத்தடை முறைகளில் ஒன்றாகும். அத்திப்பழம் இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும். உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தைத் தவிர்க்க, பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு 2-3 உலர்ந்த அத்திப்பழங்களை சாப்பிடுங்கள். அத்திப்பழத்தை அதிகமாக உண்ணாதீர்கள், ஏனெனில் இவை வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது
இலவங்கப்பட்டை
இலவங்கப்பட்டை கருப்பையைத் தூண்டும், மேலும் கருச்சிதைவு மற்றும் கருக்கலைப்பை கூட ஏற்படுத்தும். இருப்பினும், இலவங்கப்பட்டை உடனடியாக வேலை செய்யாது மற்றும் சிறிது காலம் தொடர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். இயற்கையான முறையில் உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தைத் தவிர்க்க, மாதவிடாய் வரும் வரை தினமும் இலவங்கப்பட்டையை உட்கொள்ளுங்கள். ஒரு கப் கொதிக்கவைத்த தண்ணீரில் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை சேர்த்து தினமும் காலையில் இலவங்கப்பட்டை தேநீர் அருந்தலாம். உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தை நிறுத்த இலவங்கப்பட்டை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.
பார்ஸ்லே
இயற்கையான முறையில் உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தைத் தடுக்க பார்ஸ்லே ஒரு சிறந்த தீர்வாகும். நீங்கள் இதை ஒரு லேசான மூலிகையாக உட்கொள்ளலாம் மற்றும் இது எந்த பக்க விளைவுகளையும் தராது. பார்ஸ்லே சாப்பிடுவதற்கான சிறந்த மற்றும் எளிதான வழி தேநீர் வடிவில் உள்ளது.
வேம்பு
பாதுகாப்பற்ற உடலுறவுக்குப் பிறகு கர்ப்பத்தைத் தவிர்ப்பதற்கு வேம்பு மிகவும் பிரபலமான இந்திய வீட்டு வைத்தியங்களில் ஒன்றாகும். இது இலைகள், எண்ணெய் மற்றும் உலர்ந்த இலை சாறு வடிவில் கிடைக்கிறது. வேப்பெண்ணெய் கருப்பையில் செலுத்தினால் வெறும் 30 வினாடிகளில் விந்தணுக்களை அழிக்கும். மறுபுறம், வேம்பு மாத்திரைகள் ஆண்களுக்கு தற்காலிக மலட்டுத்தன்மையை ஊக்குவிக்கும்.