பப்பாளி பழத்தை உங்க குழந்தைகளுக்கு தவறாமல் சாப்பிட கொடுக்கணுமாம்...ஏன் தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 99
குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதிலும், நோய்களின் அபாயத்தைத் தடுப்பதிலும் உணவு மற்றும் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் ஊட்டச்சத்தின் முதன்மை ஆதாரம் தாய்ப்பாலாக இருந்தாலும், ஒரு குழந்தை திட உணவுகளை உட்கொள்ளத் தொடங்கியதும், பொதுவாக நான்கு மாதங்களுக்குப் பிறகு, சரியான வளர்ச்சி மற்றும் முதிர்ச்சிக்கு அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
ஒரு ஆய்வின்படி, பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்ற திட உணவுகளை நான்கு மாதங்களுக்குள் குழந்தைகளின் உணவில் அறிமுகப்படுத்துவது, அவர்கள் வயதாகும்போது அவற்றை உண்ணும் விருப்பத்தை அதிகரிக்க உதவுவதோடு, எதிர்காலத்தில் அவர்களுக்கு உணவுப் பிரச்சினைகள், உடல் பருமன் மற்றும் உணவு ஒவ்வாமை ஆகியவை ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். .
ஆரோக்கியமான திட உணவுகளில் ஒன்றான பப்பாளி, நான்கு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு சேர்க்கும் ஊட்டச்சத்தை வழங்க தாய்ப்பாலுடன் சிறிய அளவில் கொடுக்கலாம். இந்த பழம் குழந்தையின் ஆரோக்கியத்தை பராமரிப்பது மட்டுமல்லாமல், தாய்மார்களுக்கு சில பிரசவத்திற்குப் பின் ஏற்படும் பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளிக்க உதவுகிறது. இக்கட்டுரையில், குழந்தைகளுக்கு பப்பாளியின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் பிற விவரங்களைப் பற்றி காணலாம்.
தடிப்புகளுக்கு சிகிச்சையளிக்கிறது
பப்பாளியின் கூழ் குழந்தைகளுக்கு ஏற்படும் சொறிகளுக்கு சிகிச்சையளிக்க ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாக இருக்கும். பப்பாளியில் உள்ள பாப்பைன் மற்றும் சைமோபாபைன் அழற்சி எதிர்ப்பு விளைவுகளைக் கொண்டுள்ளன. தோலில் மேற்பூச்சாகப் பயன்படுத்தும்போது, கலவைகள் சிறிய வீக்கம், தடிப்புகள் மற்றும் வலியைக் குறைக்க உதவும். இருப்பினும், மருத்துவ வல்லுநர்கள் குழந்தையின் சிறிய தோல் பகுதியில் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்ய பரிந்துரைக்கின்றனர்.
த்ரோம்போசைட்டோபீனியாவுக்கு சிகிச்சையளிக்கலாம்
முன்கூட்டிய புதிதாகப் பிறந்த குழந்தைகளில் சுமார் 1-5 சதவிகிதத்தில், பிறந்த குழந்தை த்ரோம்போசைட்டோபீனியா (NT) என்பது அவர்களின் வாழ்க்கையின் முதல் 72 மணி நேரத்திற்குள் கண்டறியப்படும் ஒரு பொதுவான நிலை மற்றும் முக்கியமாக அவர்களின் உடலில் பிளேட்லெட் எண்ணிக்கை குறைவதால் ஏற்படுகிறது. த்ரோம்போசைட்டோபீனியா இன்ட்ராவென்ட்ரிகுலர் ரத்தக்கசிவு போன்ற சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஒரு ஆய்வின்படி, பப்பாளி இலைச் சாறு, சில மருத்துவ சிகிச்சைகளுடன் தொடர்ந்து த்ரோம்போசைட்டோபீனியா உள்ள குழந்தைகளில் பிளேட்லெட் எண்ணிக்கையை மேம்படுத்துவதற்கு உதவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் தீக்காயங்களை குணப்படுத்துகிறது
குழந்தைகளின் தீக்காயங்கள் மற்றும் காயங்களைக் குணப்படுத்துவதில் பப்பாளியின் முக்கியப் பங்கை ஒரு ஆய்வு குறிப்பிடுகிறது. பப்பாளியின் கூழ், தீக்காயங்களுக்குப் பயன்படுத்தப்படும் போது குழந்தைகளால் நன்கு பொறுத்துக்கொள்ளப்படுகிறது. பப்பாளி பழம் பரவலாகக் கிடைக்கிறது மற்றும் இது மலிவான சிகிச்சை முறையாக இருக்கிறது. பப்பாளி கூழ் பப்பெய்ன் மற்றும் சைமோபபைன் காரணமாக நுண்ணுயிர் எதிர்ப்பிகளை கொண்டுள்ளது மற்றும் அதை மசித்து பயன்படுத்தினால், தீக்காயங்கள் மற்றும் காயங்கள் வேகமாக குணமடைவதோடு, காயம் தொற்று அபாயமும் குறைகிறது.
மலச்சிக்கலை எளிதாக்குகிறது
நாள்பட்ட மலச்சிக்கல் குழந்தைகளில் காணப்படும் பொதுவான பிரச்சனையாகும். அதன் சிகிச்சையானது மருந்துகளை மட்டுமல்ல, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் சரியான உணவுமுறையையும் சார்ந்துள்ளது. பப்பாளி உணவு நார்ச்சத்து மற்றும் பப்பெய்ன் போன்ற நொதிகள் நிறைந்த மலமிளக்கியாகும், இது செரிமான அமைப்பை ஆதரிக்கவும், குழந்தைகளின் குடல் இயக்கம் மற்றும் மலம் கழிப்பதை ஊக்குவிக்கவும் உதவும். குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு புதிய பழங்கள் அல்லது பப்பாளி பேஸ்ட்டை ஊட்டினால் போதும்.
குடல் புழுக்களை அழிக்க உதவுகிறது
ஊட்டச்சத்து குறைபாடு, பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொள்வது, மண்ணில் வெறுங்காலுடன் நடப்பது மற்றும் அசுத்தமான உணவுகளை உண்பது போன்ற சில காரணிகள் குழந்தைகளுக்கு குடல் புழு தொற்று மற்றும் பல வழிகளில் அவர்களின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. பப்பாளி மற்றும் அதன் விதைகளில் ஆன்டெல்மிண்டிக் மற்றும் அமீபிக் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அவை எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாமல் மலம் வழியாக ஒட்டுண்ணிகளை அழிக்க உதவும். ஒரு டீஸ்பூன் பப்பாளி விதை பொடியை தேனுடன் கலந்து இரண்டு நாட்களுக்கு கொடுக்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
தக்காளி மற்றும் கேரட்டை விட பப்பாளியில் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. வைட்டமின் சி, வைட்டமின் பி, பாந்தோத்தேனிக் அமிலங்கள், ஃபோலேட், பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற பிற முக்கிய ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன. இந்த முக்கிய ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் பயனுள்ள இம்யூனோமோடூலேட்டிங் விளைவுகளைக் கொண்டிருக்கின்றன. அவை வாழ்க்கையின் பிற்கால கட்டங்கள் வரை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.
தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு பப்பாளியின் நன்மைகள்
பப்பாளி இலைகள் இயற்கையாகவே தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பால் விநியோகத்தை அதிகரிக்க உதவும் சிறந்த உணவு என்று ஒரு ஆய்வு காட்டுகிறது. பப்பாளி மற்றும் அதன் இலைகளில் உள்ள க்வெர்செடின் ப்ரோலாக்டின் ஹார்மோன்களின் உற்பத்தியைத் தூண்டி, தாய்ப்பாலின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இது மேலும் குழந்தைகளின் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகிறது. பப்பாளி ஒரு இயற்கை கருத்தடை ஆகும். அதன் வழக்கமான நுகர்வு, தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு ஆரம்பகால கருத்தரிப்பு அபாயத்தைத் தடுக்கலாம்.
எப்படி கொடுக்க வேண்டும்?
உங்கள் குழந்தையின் உணவில் சிறிதளவு பப்பாளியைச் சேர்ப்பதன் மூலம் தொடங்கவும். உங்கள் குழந்தைகள் பப்பாளி பழம் சாப்பிடுவதற்கு பிடிக்கிறதா? இல்லையா? என்பதைக் கவனிக்கவும். அரிப்பு அல்லது சிவத்தல் போன்ற ஒவ்வாமை எதிர்விளைவுகளை நீங்கள் கண்டால், உடனடியாக அவர்களுக்கு பழம் கொடுப்பதை நிறுத்திவிட்டு மருத்துவ நிபுணரை அணுகவும். பக்கவிளைவுகள் ஏதுமின்றி குழந்தை அதை சௌகரியமாக உட்கொண்டால், நீங்கள் அவர்களுக்கு பப்பாளி ப்யூரி கொடுக்க ஆரம்பிக்கலாம் அல்லது மற்ற பழங்களுடன் கலந்து கொடுக்கலாம் அல்லது திட உணவுகளுடன் பிசைந்து கலக்கலாம். குழந்தைகளுக்கு முதல் முறையாக பழங்கள் அல்லது காய்கறிகளை வழங்குவதற்கு முன் மருத்துவ நிபுணரிடம் ஆலோசனை பெறுவது நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.