நீங்க கருச்சிதைவால் பாதிக்கப்பட்ட தம்பதிகளா? அப்ப நீங்க இத கண்டிப்பா தெரிஞ்சிக்கணுமாம்...!
- MSF.Nadhwa
- Category: தாய் குழந்தை நலன்
- Hits: 119
ஒரு குழந்தையை பெற்றெடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. ஒவ்வொரு பெண்ணுக்கும் கர்ப்பகாலம் என்பது அவர்களின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காலகட்டம். கர்ப்பம் தரிப்பது என்பது தம்பதிகள் இருவருக்கும் பேரின்பத்தை கொடுக்கும் விஷயம்.
ஓர் புதிய உயிரை தங்கள் மூலமாக இந்த உலகிற்கு கொண்டுவர போகிறோம் என்ற மட்டற்ற மகிழ்ச்சி இருவருக்கும் இருக்கும். பிறக்க போகும் குழந்தையை எண்ணி ஆயிரம் ஆசைகள் மற்றும் கற்பனைகள் இருவருக்குள்ளும் ஒட்டிக்கொண்டிருக்கும். ஆனால், இவ்வளவு எதிர்பார்ப்புகள் இருக்கும்போது, கருச்சிதைவு என்று ஒன்று நேர்ந்தால், அதை தம்பதிகள் இருவராலும் தாங்கிக்கொள்ள முடியாது. கர்ப்ப காலத்தில் ஒரு குழந்தையை இழப்பது என்பது எந்தவொரு பெற்றோருக்கும் உணர்ச்சி ரீதியான காயத்தை ஏற்படுத்தும். கர்ப்பத்தின் எந்த கட்டத்தில் இருந்தாலும், குழந்தை இழந்ததற்காக வருத்தப்படுவார்கள்.
கருச்சிதைவால் நீங்கள் மனம் உடைந்து வருந்திருக்கலாம் மற்றும் உங்களின் உறவினர்களுக்கு இது நேர்ந்திருக்கலாம். அப்போது உணர்ச்சிகளை நிர்வகிப்பது கடினமாகிவிடும். இதனால் நீங்கள் குற்ற உணர்வு, கோபம், அதிர்ச்சி, சோகம், உணர்வின்மை அல்லது தோல்வி போன்ற உணர்வுகளை அனுபவிக்கலாம். இந்த கடினமான கட்டத்தை சமாளிக்க உதவும் சில வழிகள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.
உணர்வுகளை வெளிப்படுத்துங்கள்
கருச்சிதைவு உங்களை பலவிதமான உணர்ச்சிகளுக்கு ஆளாக்கலாம். உங்கள் வலியை சரியாக வெளிப்படுத்த நீங்கள் போராடலாம். இந்த துயரமான சம்பவத்திற்கு பிறகு உங்கள் தலைவிதியின் மீது நீங்கள் கோபப்படலாம் அல்லது இதற்கு காரணம் நீங்கள் தான் என உங்களை நீங்களே குற்றவாளியாக உணரலாம். உங்கள் உணர்ச்சிகளை மனதிற்குள்ளே வைத்து கஷ்டப்படுவதற்கு பதிலாக, நீங்களே உங்கள் மீது கருணை காட்டுவதும், அவற்றைச் சமாளிப்பதற்கு நேரத்தை ஒதுக்குவதும் முக்கியம்.
குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் உதவியைப் பெறுங்கள்
கருச்சிதைவுக்குப் பிறகு, உங்கள் அன்றாட நடவடிக்கைகளைத் தொடர்வது கடினமாகிவிடும். மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் நீங்கள் மிகவும் சோர்வாக இருப்பீர்கள். வேலைகள், உணவு சமைத்தல் மற்றும் குடும்பத்தை கவனித்துக்கொள்வது போன்றவற்றில் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் உதவி செய்வார்கள். அவர்கள் நீங்கள் சாதாரணமாக ஆவதற்கு உங்களுக்கு உதவியாக இருப்பார்கள்.
ஒன்றாக கடந்து வாருங்கள்
கருவை சுமப்பது பெண்கள் என்பதால், அவர்கள் உடல் மற்றும் மன ரீதியாக மிகுந்த கவலையடைந்திருப்பார்கள். பொதுவாக தாய் குழந்தையுடன் உணர்ச்சி ரீதியாக அதிகமாக இணைந்திருப்பதாகக் கருதப்பட்டாலும், கருச்சிதைவு என்பது குழந்தையை எதிர்பார்க்கும் தந்தைக்கும் மிகவும் மனகவலையை ஏற்படுத்தும். தம்பதிகள் தங்கள் உணர்வுகளை ஒருவருக்கொருவர் வெளிப்படுத்துவதும், ஒருவரையொருவர் சொல்வதைக் கேட்பதும், வலியை ஒன்றாகச் சமாளிப்பதும் முக்கியம். ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருக்கும்போது, நீங்கள் இதை விரைவில் கடந்து வரலாம்.
குழந்தையை நினைவுகூருவதைக் கவனியுங்கள்
கர்ப்ப காலத்தில் ஒரு குழந்தையின் இழப்பு என்பது மற்ற நபரை இழப்பது போலவே முக்கியமானது. எனவே, குழந்தையின் இருப்பை ஏற்றுக்கொள்வது முக்கியம், எவ்வளவு குறுகிய காலம் இருந்தாலும், அதை உங்கள் மனம் ஏற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் குழந்தை இல்லை என்பதையும் அதற்கு காரணம் நீங்கள் இல்லை என்பதையும் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். இது உங்கள் நொறுங்கிய மனதை குணப்படுத்த உதவும்.
தாய்க்கு குற்ற உணர்வு வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்
குடும்பம் மற்றும் சமூகக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், கருச்சிதைவுக்குக் கருவுற்றிருக்கும் தாய்தான் காரணம் என அடிக்கடி குற்றம் சாட்டப்படுகிறது. உண்மையில், பெரும்பாலான கருச்சிதைவுகள் கருவில் உள்ள குரோமோசோமின் அசாதாரணங்களால் நிகழ்கின்றன. உங்கள் கர்ப்பத்தின் முடிவை மாற்றுவதற்கு நீங்கள் எதுவும் செய்ய முடியாது என்பதை புரிந்துகொள்ளுங்கள். வாழ்க்கையில் நீங்கள் முன்னோக்கி செல்ல சுய பழியை விட்டுவிடுவது முக்கியம். தாய் குற்றவாளியாக உணராமல் இருக்கவும் வேறு யாராலும் குற்றவாளியாக உணரப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வது தந்தையின் கடமை.