புற்றுநோயை விரட்டியடிக்க உதவும் சீதாப்பழம்!
- admin
- Category: உடல் நலம்
- Hits: 243
ஒவ்வொரு பழத்திற்கும் ஒவ்வொரு சுவை மற்றும் குணம் உண்டு. பழங்களைப் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். நமது தினசரி உணவில் பழங்களை கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அனைவருக்கும் பழங்கள் பல நன்மைகளை செய்கின்றது. எல்லா வகைப் பழங்களையும் சாப்பிடுவது நல்லது. நாம் அன்றாடம் சாப்பிட வேண்டிய பழங்களில் சீதா பழம் முக்கியமான ஒன்றாகும். சீதாப்பழம் என்பது ஒரு இனிப்பு சுவையை உடைய பழம்.மேலே பச்சை நிற தடித்த தோல் மற்றும் உள்ளே மென்மையான சதைப் பகுதி மற்றும் விதைகள் கொண்டது.
விதையின் மேலே சதைப் பகுதி போர்த்தப்பட்டு இருக்கும் மிகவும் இனிப்பான சுவையைக் கொண்டது இந்த சீதாப்பழம்.இந்த பழம் ஒரு குளிர்ச்சியான பழம் ஆகும். இந்த பழம் புற்று நோயை தடுக்கும் தன்மை கொண்டது என்று அனைவருக்கும் தெரிவித்தவுடன் தான் இந்த பழத்தைப் பற்றிய நன்மைகள் வெளிச்சத்திற்கு வந்தது.
அசீடோஜெனின்.
அல்கலைடு போன்ற கூறுகளை இந்த பழம் கொண்டுள்ளது. இந்த கூறுகள் புற்று நோயை உண்டாக்கும் அணுக்களின் வளர்ச்சியை குறைக்க சிறந்த முறையில் உதவுகின்றன. சீதாப்பழத்தில் இரும்பு சத்து அதிகம் உள்ளது. அதனால், இரத்த சோகை உள்ளவர்கள் இந்த பழத்தை உட்கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இது இரத்தத்தின் ஹீமோகுளோபின்-சுமக்கும் திறனை அதிகரிக்கிறது மற்றும் சோர்வையும் விரட்டுகிறது. இதனால், தினமும் சாப்பிட்டு ஆரோக்கியமான வாழுங்கள்.
சீதாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
சீதாப் பழம் சிறிய வகை மரமாக வளரும் தன்மையுடையது. தண்டுகள் மூலமும், விதைகள் மூலமும், எங்கும் எளிதில் வளரும் தன்மையுடையது. வைட்டமின், புரதம், மற்றும் இரும்புச் சத்து அதிகம் கொண்ட சீதாப்பழம் மிக உயர்வான மருத்துவப் பலன்கள் கொண்டது. அதனால்தான் நாம் அதிகம் உபயோகிப்பதில்லை.
இதன் பலன்களை நன்கு அறிந்த மேலைநாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அதிக அளவில் நம்மிடமிருந்து இறக்குமதி செய்து மருந்துப்பொருட்கள் தயாரிக்கின்றன. தாம் உபயோகித்து இதன் பலன்களை அனுபவிக்காவிட்டாலும் சீதாப்பழங்களை அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, சிலர் பொருளாதாரத்தில் வளமான பலன்களை, அடைகின்றனர்.
சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி, கால்சியம் சத்து மிகுதியாக காணப்படுகிறது. நீர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது தவிர மாச்சத்து, புரதம், கொழுப்பு, தாது உப்புகள், நார்ச்சத்து, பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்றவை இப்பழத்தில் அடங்கியுள்ளன.
சீதாப்பழ மரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. இலைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட கசாயம் வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்துகிறது. சயரோக நோயாளிகளுக்கு சீதாப்பழ இலை அருமருந்து. சீதாப்பழ மரத்தின் வேர் கருச்சிதைவை கட்டுப்படுத்துகிறது.
சீத்தாப் பழத்தோடு உப்பு கலந்து உடையாத பிளவை பருக்கள் மேல் பூசிவர பிளவை பழுத்து உடையும். இலைகளை அரைத்து புண்கள் மேல் பூசினால் உடனடியாக குணமடையும். விதைகளை பொடியாக்கி சமஅளவு பொடியுடன் பாசிப்பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து குளித்து வர முடி மிருதுவாகும். பேன்கள் ஒழிந்துவிடும்.
சீத்தாப்பழ விதை பொடியோடு கடலைமாவு கலந்து எலுமிச்சை சாறு கலந்து குளித்து வர முடி உதிர்வது கட்டுப்படும். சிறிதளவு வெந்தயம், பாசிப்பயறு இரண்டையும் கலந்து இரவு ஊறவைத்து பின்னர் காலையில் அரைத்து சீத்தாப் பழ விதையின் பொடியை கலந்து தலையில் தேய்த்து ஊறியபின்னர் குளித்து வர தலைமுடி குளிர்ச்சி பெறும். பொடுகு மறையும்.
மேனியை பளபளப்பாக்குவதில் சீத்தாப்பழ விதை தூள் முக்கிய பங்காற்றுகிறது. விதையின் தூளில் தயாரிக்கப்பட்ட தேநீர் அருந்தினால் உடலுக்கு உற்சாகம் ஏற்படும். சீத்தாபழத்தில் உடலை வலிமையாக்கும் சக்தி அதிகம் காணப்படுகிறது. இதைச் சாப்பிட இதயத்திற்கு நல்ல பலத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சிறுவர்களுக்கு சீத்தாப்பழம் அதிகம் கொடுத்து வந்தால் உடல் உறுதியாகும். எலும்பு, பற்கள் பலமடையும். சீத்தாப்பழம் குளிர் மற்றும் காய்ச்சலை குணப்படுத்தும். சீத்தாப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர இதயம் பலப்படும் ஆஸ்துமா, காசநோய் கட்டுப்படும்.
சீத்தாப்பழத்தை உட்கொண்டால் தலைக்கும் மூளைக்கும் செல்லும் ரத்த ஓட்டம் சீராகும். இதன் மூலம் குழந்தைகளின் கவனிக்கும் திறன், நினைவாற்றல் அதிகரிக்கும்.
சீதா (Annona squamosa), வெப்பமண்டல அமெரிக்கப் பகுதியில் முதன் முதலில் விளைந்த அனோனா (Annona) சாதியைச் சேர்ந்த தாவர இனமாகும். இது எட்டு மீட்டர் உயரம் வளரக்கூடிய சிறிய மரமாகும். அனோனா சாதி இனங்களில், இதுவே உலகெங்கும் அதிகம் விளைவிக்கப்படுவதாகும்.
பல்வேறு நாடுகளில் இம்மரம் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டுக்கு, தைவானில் இப்பழம் புத்தர் தலை என்றழைக்கப்படுகிறது. ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.
பெரும்பாலான அனோனா சாதி இனங்களைப் போல் சீதா மரமும் மிதவெப்பப் பகுதிகளிலேயே (subtropical) நன்றாக வளரும் என்றாலும், நன்றாகப் பாதுகாக்கப்படும் பட்சத்தில், குளிர்காலங்களில் 28 F வெப்பத்தில் கூட உயிர் வாழும்.
சீதா மரம் நன்றாக காய்க்கக்கூடியது. இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் பத்து முதல் 20 பவுண்டு எடையளவுக்கு பழங்களை ஈனக்கூடியது. காய்கள் மரத்தில் பழுக்கா என்பதால், அவற்றை பறித்து வீட்டில் ஓய்வாக இருக்கும் போது உண்ணத்தக்கவை சீதாப் பழங்கள். பழத்தின் ஓடுகள் மெதுவாக விரிசல் விடும்போது அவற்றை பறித்து வைக்கலாம்.
சிறிதளவு அழுத்தம் தந்தால் பழத்தின் உருவம் சிதையும் நிலை வரும்போது, பழம் உண்ணத்தக்க சுவை நிலையை எட்டிவிட்டது என அறியலாம். சீதாப் பழங்கள் அதிக கலோரிகள் கொண்டதாகவும் இரும்புச்சத்து மிக்கதாகவும் இருக்கும். தலைப்பேன்களை ஒழிக்கும் மருத்துவ குணத்தை சீதாப்பழம் கொண்டிருப்பதால், இந்தியாவில், இப்பழம் கூந்தல் தைலம் தயாரிக்கப் பயன்படுகிறது.