நைட்டு இரும்பி இரும்பி தூக்கத்திலிருந்து எழுந்திருக்கிறீங்களா? அதுக்கு காரணம் என்ன தெரியுமா?
- MSF.Nadhwa
- Category: உடல் நலம்
- Hits: 118
இருமல் தொடர்ந்து வரும் போது அது உங்களுக்கு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. சில சமயங்களில் தொடர்ந்து இரும்பி நம் நெஞ்சே வலிக்க ஆரம்பித்து விடும். எரிச்சலூட்டும் காரணிகளால் கூட சிலருக்கு இருமல்கள் ஏற்படலாம்.
மூக்கு மற்றும் சுவாச பாதையில் ஏற்படும் எரிச்சல்களால் இருமல் அதிகமாகி இத்தகைய பாதிப்பு ஏற்படக் கூடும். இருமல் அதிகமாக இருக்கும் போது பலர் தூக்கத்தில் இருந்து கூட எழுந்திருப்பார்கள். இப்படி தூக்கத்தை பாதிக்கும் இருமலை இரவு நேர இருமல் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சரி வாங்க அதைப் பற்றி இக்கட்டுரையில் நாம் காண்போம்.
இரவு நேரத்தில் ஏன் இருமல் ஏற்படுகிறது?
இருமல் என்பது தொண்டை, மூச்சுக்குழாய் ஆகியவற்றிலிருந்து எரிச்சலூட்டும் சளி போன்ற பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. சுற்றுப்புற காற்று மாசுபாடு காரணமாக சிலருக்கு இரவு நேர இருமல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. சிலருக்கு சில காரணிகள் அழற்சியை ஏற்படுத்தலாம். வாசனை குச்சிகள், கொசுவர்த்தி சுருள்கள், ஈரமான சுவர்கள் போன்றவை பூஞ்சை தொற்றை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. புகைப்பிடித்தல் காரணமாக கூட சிலருக்கு இந்த இருமல் தொல்லை ஏற்படலாம்.
இதர சுவாச பாதை பிரச்சனைகள்
* மூச்சுக் குழாய் அழற்சி
* நாள்பட்ட தடுப்பு நுரையீரல் நோய்
* சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸ்
* இடைநிலை நுரையீரல் நோய் (ILD)
* முதன்மை அல்லது இரண்டாம் நிலை நுரையீரல் கட்டிகள்
* சர்கோயிடோசிஸ்
* காசநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது.
பிற காரணங்கள்
* இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD)
* இடது இதய வெண்ட்ரிக்கிள் வால்வு பாதிப்பு
* மிட்ரல் ஸ்டெனோசிஸ்
* நுரையீரல் அழற்சி
* சைக்கோஜெனிக் இருமல்
இரவு நேர இருமலை எப்படி சரிசெய்யலாம்?
சிலருக்கு இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் பாதிப்பு இருக்கும். இவர்களுக்கு அடிக்கடி இரவு நேர இருமல் வர வாய்ப்பு உண்டு. இந்த பாதிப்பு இருக்கும் நபர்கள் இரவு உணவிற்கும், உறங்குவதற்கும் இடையே இரண்டு மணி நேர இடைவெளி இருப்பது நல்லது. இரவு நேர இருமலை சரிசெய்ய ஆன்டி ஹிஸ்டமைன் மற்றும் டிகோங்கஸ்டெண்டுகள் போன்ற மூக்கு சொட்டு மருந்துகளை பயன்படுத்தி வரலாம். உங்களுக்கு நுரையீரல் பாதிப்பு இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுங்கள்.
உங்கள் படுக்கையை சாய்த்து வைத்து தூங்குங்கள்
சாப்பிட்ட உடனே படுப்பதை நிறுத்துங்கள். இது உங்களுக்கு எதுக்களித்தல் பிரச்சினையை ஏற்படுத்தலாம். சாப்பிட்ட பிறகு குறைந்தது 2.5மணி நேரம் காத்திருந்து அப்புறமாக படுப்பது நல்லது. அதே மாதிரி உங்கள் தலையணையை 6-8 அங்குலங்கள் உயர்த்த வேண்டும். நீங்கள் தலையை உயர்த்தி தூங்குவது உங்கள் இருமலை குறைக்க பயன்படுகிறது.
கரப்பான் பூச்சிகளை ஒழிக்க வேண்டும்
கரப்பான் பூச்சிகளின் உமிழ்நீர், கழிவு போன்றவை கூட உங்களுக்கு இருமலை உண்டாக்கும். எனவே வீட்டில் கரப்பான் தொல்லை இருந்தால் அதை முதலில் ஒழிக்க முற்படுங்கள். உணவுப் பாத்திரங்களை எப்பொழுதும் மூடி வையுங்கள்.