கற்றாழை சாறுடன் பூண்டு சாறை கலந்து குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
- Kaju
- Category: உடல் நலம்
- Hits: 125
உடலை ஆரோக்கியமாகவும், அழகாகவும் வைத்திருக்க இயற்கையாக தயாரிக்கப்படும் ஜூஸ்களில் ஒன்றையாவது தினசரி குடித்தாலே போதும்.
கற்றாழை பூண்டு ஜூஸை எப்படி தயாரிப்பது என்றும், கற்றாழை சாறுடன் பூண்டு சாறை கலந்து குடித்தால் கிடைக்கும் நன்மைகளை என்னவென்று பார்ப்போம்.
தேவையானவை:
• கற்றாழை- 2
• பூண்டு- தேவையான அளவு
செய்முறை:
• முதலில் கற்றாழை மற்றும் பூண்டினை தனித்தனியாக அரைத்து அதன் சாறை தனியாக எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
•பின்னர் அந்த இரண்டையும் சிறிதளவு நீர் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்தால் உடலுக்கு நன்மை தரும் அற்புதமான ஜுஸ் தயார்.
நன்மைகள்:
• தினமும் இந்த ஜூஸை இதை குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரையும். மேலும் இதனால் உடல் பருமன் அதிகரிக்காமல் பார்த்து கொள்ள முடியும்.
• உடலில் நோயெதிர்ப்பு மண்டலத்தை அதிக பலப்படுத்தி அடிக்கடி ஏற்படும் காய்ச்சல் மற்றும் சில உடல் உபாதைகளை வராமல் தடுக்கிறது.
•சுவாச பாதையில் உள்ள உட்காயங்கள் மற்றும் நோய்த் தொற்றுகளை சரி செய்ய இந்த ஜூஸை குடிப்பது மிகவும் நல்லது. மேலும் சைனஸ் பிரச்சனை இருப்பவர்களும் இதை குடித்தால் குணமாகலாம்.
•உயர் இரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் தினமும் ஒரு டம்ளர் இந்த பானத்தை குடித்தால் இரத்த அழுத்தம் படிபடியாக குறையும்.
• மூளைக்கு தேவையான சத்துகளை அதிக அளவில் கொண்டுள்ளதால் ஞாபக் மறதி பிரச்சனையை உள்ளவர்காள் இந்த ஜூஸை குடித்தால் நன்மை உண்டாகும்.
• இந்த ஜூஸில் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் மற்றும் பைட்டோ நியூட்ரியண்டுகள் அதிகமாக உள்ளதால் இவை உடலில் புற்று நோய் ஏற்படுத்தக் கூடிய செல்களை அழிப்பதோடு புற்று நோய் வராமல் பார்த்து கொள்ள முடியும்.